ETV Bharat / state

திமுக போராட்டத்தைக் கண்டு பயந்து போன அமித் ஷா -உதயநிதி ஸ்டாலின்

கரூர்: இந்தியை எதிர்த்து திமுக அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்து விட்டார் என்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi stalin
author img

By

Published : Sep 20, 2019, 8:11 AM IST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர் இளவரசு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவில் இந்தி மொழிதான் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலாக திமுக சார்பில்தான் தெரிவிக்கப்பட்டது என்றும் அத்தோடு இல்லாமல் இதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், ஆர்ப்பாட்டத்தை பார்த்து பயந்து போன மத்திய அரசு, திமுக தலைவரை ஆளுநர் மூலம் அழைத்து பேசியுள்ளது. ஆளுநர்கள் முதலமைச்சரை அழைத்துப் பேசுவதுதான் வழக்கம், ஆனால் தமிழ்நாடு ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசியிருப்பது திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனக் கூறினார்.

மேலும், இந்தியை எதிர்த்து திமுக அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்து விட்டார். அதனால்தான் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக விரைவில் ஆட்சி அமைக்கும் ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி. இந்தியை எதிர்த்து திமுக போராட்டத்தை தற்காலிகமாகத் தான் ஒத்திவைத்துள்ளது. தலைமை கழகம் அறிவித்தால் இந்தியை எதிர்த்து இளைஞரணி மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தும் என்று கூறினார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர் இளவரசு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவில் இந்தி மொழிதான் ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலாக திமுக சார்பில்தான் தெரிவிக்கப்பட்டது என்றும் அத்தோடு இல்லாமல் இதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், ஆர்ப்பாட்டத்தை பார்த்து பயந்து போன மத்திய அரசு, திமுக தலைவரை ஆளுநர் மூலம் அழைத்து பேசியுள்ளது. ஆளுநர்கள் முதலமைச்சரை அழைத்துப் பேசுவதுதான் வழக்கம், ஆனால் தமிழ்நாடு ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசியிருப்பது திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனக் கூறினார்.

மேலும், இந்தியை எதிர்த்து திமுக அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்து விட்டார். அதனால்தான் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக விரைவில் ஆட்சி அமைக்கும் ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி. இந்தியை எதிர்த்து திமுக போராட்டத்தை தற்காலிகமாகத் தான் ஒத்திவைத்துள்ளது. தலைமை கழகம் அறிவித்தால் இந்தியை எதிர்த்து இளைஞரணி மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தும் என்று கூறினார்.

Intro:திமுக போராட்டத்தை கண்டு அமித்ஷா பின்வாங்கி விட்டார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சுBody:திமுக போராட்டத்தை கண்டு அமித்ஷா பயந்து விட்டார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு .

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞரணி அமைப்பாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழச்சியில் கலந்து கொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது:

இந்தி மொழி குறித்து அமிர்ஷா இந்தியாவுக்கு இந்தி மொழி ஒரே மொழியாக இருக்கவேண்டும் என கருத்திற்கு இந்தியாவிலே முதல் எதிர்ப்புக் குரலாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது அத்தோடு இல்லாமல் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கபட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தை பார்த்து மத்திய அரசு பயந்து திமுக தலைவரை ஆளுநர் மூலம் அழைத்து பேசியுள்ளது

ஆளுநர்கள் முதலமைச்சர் தான் அழைத்துப் பேசுவது வழக்கம் ஆனால் தமிழக ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து பேசியுள்ளார் இது திமுக கிடைத்த வெற்றி.


அமித்ஷா பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று ஆளுநர் திமுக தலைவரிடம் கூறி உள்ளார் அவருக்கு திமுக தலைவர் இது உங்களுடைய கருத்தை அல்லது அமித்ஷாவின் கருத்தா? என்று கேட்டுள்ளார் அதற்கு ஆளுநர் அமித்ஷா சொன்னதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது இது அவருடைய கருத்து தான் என்றார் .

இதுவே திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

இந்தியை எதிர்த்து திமுக அறிவித்த போராட்டத்தை கண்டு அமித்ஷா பயந்து விட்டார். அதனால்தான் தனது கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார் அமித்ஷா

தமிழகத்தில் திமுக விரைவில் ஆட்சி அமைக்கும் மு க ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது உறுதி.

ஹிந்தி எதிர்த்து திமுக போராட்டத்தை தற்காலிகமாக தான் ஒத்திவைத்துள்ளது
தலைமைக்கழகம் அறிவித்தால் இந்தியை எதிர்த்து இளைஞரணி மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் நடத்தும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கரூர் வேலாயுதம்பாளையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.