ETV Bharat / state

'உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா?' - ஜான் பாண்டியன் கேள்வி

author img

By

Published : Sep 19, 2019, 4:43 PM IST

கரூர்: உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

jhon pandiyan

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தி மொழிக் கற்பதை வரவேற்க வேண்டும். அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழலுள்ளது.

ஆதலால் இந்தி மொழியை கற்பதில் தவறில்லை. அதேசமயம், இந்தி திணிப்பு யாராலும் ஏற்கப்படாது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப் போக்கை கைவிட வேண்டும்" எனக் கூறினார்.

ஜான் பாண்டியன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினால் ஒரு மணி நேரம் தூர்வாரும் பணியில் ஈடுபட முடியுமா என்றும், அவரால் தலையில் மண்சட்டி சுமக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிக்கலாமே: " தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன்" - கடுமையாக விமர்சித்த ஜான் பாண்டியன்

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தி மொழிக் கற்பதை வரவேற்க வேண்டும். அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழலுள்ளது.

ஆதலால் இந்தி மொழியை கற்பதில் தவறில்லை. அதேசமயம், இந்தி திணிப்பு யாராலும் ஏற்கப்படாது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப் போக்கை கைவிட வேண்டும்" எனக் கூறினார்.

ஜான் பாண்டியன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினால் ஒரு மணி நேரம் தூர்வாரும் பணியில் ஈடுபட முடியுமா என்றும், அவரால் தலையில் மண்சட்டி சுமக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிக்கலாமே: " தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன்" - கடுமையாக விமர்சித்த ஜான் பாண்டியன்

Intro:ஹிந்தி மொழி கற்பது தவறில்லை - கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி


Body:இந்தி மொழி கற்பதை வரவேற்க வேண்டும் மொழிகளை கற்பதால் தவறில்லை அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களின் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது ஆதலால் இந்தி மொழியை கற்பதில் தவறில்லை அதேசமயம் இந்தி மொழி திணிப்பு அதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

பதிலாக மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப் போக்கை கைவிட வேண்டும் இவர்கள் அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை என்றாவது வரவேற்று ஆதரவு தெரிவித்து உண்டா இந்த மனப்போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது அதே சமயம் அதற்கு போட்டியாக செயற்படுவதாக கூறும் முக ஸ்டாலின் மேலும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு மணி நேரம் தூர்வாரும் பணியில் ஈடுபட முடியுமா அல்லது சட்டியை தலையில் தூக்கி வைத்துக் கொள்ள முடியுமோ அவர்கள் பஞ்சு அத்தகைய படுத்து உறங்குவார்கள் அவர்களுக்கு விவசாயிகளின் வேதனை தெரியுமா.

அரசியல் நிலைக்கு எதிர்நிலை கொள்ள வேண்டும் என்ற நேர்கோடு இதுபோன்ற பணியில் ஈடுபடுவது என்பது மக்களை திசை திருப்பும் செயல் ஆகும் உண்மையிலேயே அவர்கள் தூர் வாரினால் அதனை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கும்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.