ETV Bharat / state

'கரோனா நிதி எனக்கு தான்...'; மனைவியைத் தாக்கிய நபர் கைது!

author img

By

Published : May 17, 2021, 6:19 PM IST

கரூர் : கரோனா நிதி பெறுவது தொடர்பாக மனைவியைத் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

’கரோனா நிதி எனக்கு தான்...’; மனைவியை தாக்கிய நபர் கைது!
’கரோனா நிதி எனக்கு தான்...’; மனைவியை தாக்கிய நபர் கைது!

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்தவர், சிவகுமார் (52). இவரது மனைவி காந்தி (44). இருவரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காந்தி மட்டும் தனியாக வெங்கமேடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (மே.15) அரசு வழங்கும் கரோனா சிறப்பு நிதியான ரூ. 2 ஆயிரத்தை பெறுவதற்காக, காந்தி நியாயவிலைக்கடை வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார் கரோனா சிறப்பு நிதியைப் பெறுவது தொடர்பாக காந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அனைவர் முன்னிலையிலும் காந்தியைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து காந்தி, கரூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலைச் சேர்ந்தவர், சிவகுமார் (52). இவரது மனைவி காந்தி (44). இருவரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காந்தி மட்டும் தனியாக வெங்கமேடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (மே.15) அரசு வழங்கும் கரோனா சிறப்பு நிதியான ரூ. 2 ஆயிரத்தை பெறுவதற்காக, காந்தி நியாயவிலைக்கடை வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார் கரோனா சிறப்பு நிதியைப் பெறுவது தொடர்பாக காந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அனைவர் முன்னிலையிலும் காந்தியைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து காந்தி, கரூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.