ETV Bharat / state

ரயில் பாதையில் அறுந்து விழுந்த மின்கம்பி - நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய 4 ரயில்கள் - கன்னியாகுமரியில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் தடத்தில் உள்ள, மின் கம்பியின் மீது விளம்பரப் பலகை அறுந்து விழுந்ததால் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

Train came late due to malfunction of train wiring
அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் ஊழியர்கள்
author img

By

Published : Dec 6, 2019, 5:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கடுமையான சூறைக் காற்று வீசி வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் பாதை அருகே வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகை, சூறைக் காற்றினால் மின் கம்பியில் விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்து விழுந்ததோடு தூண்களும் சேதம் அடைந்தன.

இதனால், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த ரயில், அதே இடத்தில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், மின் கம்பியின் மீது விழுந்த விளம்பரப் பலகையை சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றினர்.

மேலும், அறுந்து விழுந்த மின் கம்பியை மாற்றி, புதிய மின் கம்பிகளை இணைத்தார்கள். இதனால் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு ரயில், கோவை செல்லும் ரயில் உட்பட நான்கு ரயில்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அறுந்து விழுந்த மின் கம்பியைச் சரிசெய்யும் ஊழியர்கள்

மின் கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டது. இதனால், ரயிலில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கடுமையான சூறைக் காற்று வீசி வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் பாதை அருகே வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகை, சூறைக் காற்றினால் மின் கம்பியில் விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்து விழுந்ததோடு தூண்களும் சேதம் அடைந்தன.

இதனால், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த ரயில், அதே இடத்தில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், மின் கம்பியின் மீது விழுந்த விளம்பரப் பலகையை சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றினர்.

மேலும், அறுந்து விழுந்த மின் கம்பியை மாற்றி, புதிய மின் கம்பிகளை இணைத்தார்கள். இதனால் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு ரயில், கோவை செல்லும் ரயில் உட்பட நான்கு ரயில்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அறுந்து விழுந்த மின் கம்பியைச் சரிசெய்யும் ஊழியர்கள்

மின் கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டது. இதனால், ரயிலில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் மின் தடத்தில் உள்ள மின் கம்பி மீது சூறை காற்றினால் விளம்பர பலகை அறுந்து விழுந்தது. இதனால் நாகர்கோவில் இருந்து மும்பை செல்லும் ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. மேலும் நான்கு ரயில்கள் அந்த அந்த வழி தடத்தில் நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு.Body:tn_knk_02_train_late_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் மின் தடத்தில் உள்ள மின் கம்பி மீது சூறை காற்றினால் விளம்பர பலகை அறுந்து விழுந்தது. இதனால் நாகர்கோவில் இருந்து மும்பை செல்லும் ரயில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. மேலும் நான்கு ரயில்கள் அந்த அந்த வழி தடத்தில் நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கடுமையான சூறை காற்று வீசி வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் பாதை அருகே வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை சூறை காற்றினால் மின் கம்பியில் விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்து விழுந்ததோடு தூண்கள் சேதமானது. இதனால் நாகர்கோவில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த ரயில் அதே இடத்தில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இதனால் மின் கம்பி ரயில் மீது விழாமல் தடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே துறையை சேர்ந்த பத்துக்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் மின் கம்பி மீது விழுந்த விளம்பர பலகையை சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றினர். மேலும் அறுந்து விழுந்த மின் கம்பி மாற்றி விட்டு புதிய மின் கம்பிகளையும் இணைத்தார்கள். இதனால் நாகர்கோவில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு வண்டி ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திலும் நாகர்கோவில் இருந்து கோவை செல்லும் ரயில் உட்பட நான்கு ரயில் ரயில்கள் அந்த அந்த ரயில் நிலையங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேராம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை கோவை மற்றும் வெளியூர் செல்லும் பெண்கள் குழந்தைகள் உட்பட ரயில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.