ETV Bharat / state

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்’

author img

By

Published : Jan 5, 2020, 11:19 PM IST

கன்னியாகுமரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இதனை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக அரசும் ஒரு காரணமாக உள்ளது" என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இதனை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக அரசும் ஒரு காரணமாக உள்ளது" என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை

Intro:இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் கூறுவது பசப்பு வார்த்தை. அதேபோன்று இந்திய குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது கன்னியாகுமரி அருகே நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.Body:tn_knk_01_dawheedJamaat_executivecommittee_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் கூறுவது பசப்பு வார்த்தை. அதேபோன்று இந்திய குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது கன்னியாகுமரி அருகே நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். இதனை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும். பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக அரசும் ஒரு காரணமாக இருந்தது எனவே தமிழகத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல் படுத்தாமல் இருந்தால் அதிமுக அரசின் எதிர்காலம் நன்றாக இருக்கும் அது அவர்கள் கையில்தான் உள்ளது இதனை தமிழக அரசுக்கு செயற்குழு மூலம் தீர்மானமாக கோரியுள்ளோம்.


நாளை சட்டமன்ற கூட்ட தொடர் கூட உள்ள நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக, அதிமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடைமுறை படுத்த மாட்டோம் என்று கூறினால் தான் அதிமுக அரசு தப்பிக்கும்.இல்லை என்றால் சில நாட்களில் துடைத்தெறியப்படும் நிலையை சந்திப்பார்கள்.


தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களை நாங்கள் காப்போம் என தமிழக முதல்வர் கூறுவது பசப்பு வார்த்தை, தமிழர்களை ஏமாற்றும் வார்த்தை.

தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்கள் குறித்து பா.ஜ.க தலைவர்கள் சாயத்தை பூசுகிறார்கள். கொச்சைப்படுத்தும் வேலையை பா.ஜ.க செய்கிறது. இது கண்டிக்கதக்கது.


முஸ்லிம்கள் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என கூறுவது இந்திய குடியுரிமை சட்டத்திற்கு சட்டத்திற்கு எதிரானது.


கருப்பு பணம் விவகாரத்தல் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டார்கள், கருப்புபண விவகாரத்தல் கூறிய பொய் போன்று தற்போது குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து பேசுவதும் பொய்.


நெல்லை கண்ணன் கைது, என்பது மத்திய அரசிற்கு பயந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை . தமிழகத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்றால் முதலில் எச்.ராஜா வை தான் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.