ETV Bharat / state

ஊர் கெத்தை காட்டுவதில் போட்டி - பேராசிரியர்கள் எதிரே மாணவர்கள் மோதல்

author img

By

Published : Apr 6, 2022, 1:07 PM IST

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் ஊர் கெத்தை காட்டுவதில் ஏற்பட்ட போட்டியில் பேராசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர்.

பேராசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் மோதல்
பேராசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் மோதல்

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒருதரப்பு மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு தரப்பு மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதற்குப் பழிக்குப் பழி தீர்க்க அவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் கண்முன்னே திடீரென மோதல் உருவானது. ஊர் கெத்தை காட்டுவதிலும் மாணவிகளிடம் மாஸ் காட்டுவதிலும் இரண்டு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் மோதல்

இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மாணவர்கள், கல்லூரி தரப்பில் புகார் அளிக்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் கொள்ளை: நேபாளம் கொள்ளையர்கள் கைது

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒருதரப்பு மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு தரப்பு மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதற்குப் பழிக்குப் பழி தீர்க்க அவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் கண்முன்னே திடீரென மோதல் உருவானது. ஊர் கெத்தை காட்டுவதிலும் மாணவிகளிடம் மாஸ் காட்டுவதிலும் இரண்டு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் கண்முன்னே மாணவர்கள் மோதல்

இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்டம் பழவூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மாணவர்கள், கல்லூரி தரப்பில் புகார் அளிக்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் கொள்ளை: நேபாளம் கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.