ETV Bharat / state

அரசு பள்ளியில் உலக சிட்டுக்குருவி தின விழிப்புணர்வு

author img

By

Published : Mar 20, 2019, 5:52 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக சிட்டுக்குருவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒரு காலத்தில் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்த சிட்டுக் குருவிகள், வீடுகளின் மேற் கூரைகளிலும், ஓலைக்குடிசைகளிலும் குடும்பத்தில் ஒரு அங்கம் போல வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இன்று வேகமாக மறைந்து வருகின்றன. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான கதிர்வீச்சுகளால் முற்றிலும் அழியும் நிலையை சந்தித்துள்ளது. வயல்களில் பூச்சிமருந்து அதிகம் தெளிக்கப்படுவதால் பூச்சிப்புழுக்களை உணவாக உண்ணும் சிட்டுக்குருவிகள் போதிய உணவின்றி அழிந்திருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிட்டுக்குருவிகளின் பாரம்பரியம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம், சிட்டுக்குருவிகளால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகள், அவை அழிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

ஒரு காலத்தில் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்த சிட்டுக் குருவிகள், வீடுகளின் மேற் கூரைகளிலும், ஓலைக்குடிசைகளிலும் குடும்பத்தில் ஒரு அங்கம் போல வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இன்று வேகமாக மறைந்து வருகின்றன. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான கதிர்வீச்சுகளால் முற்றிலும் அழியும் நிலையை சந்தித்துள்ளது. வயல்களில் பூச்சிமருந்து அதிகம் தெளிக்கப்படுவதால் பூச்சிப்புழுக்களை உணவாக உண்ணும் சிட்டுக்குருவிகள் போதிய உணவின்றி அழிந்திருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிட்டுக்குருவிகளின் பாரம்பரியம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம், சிட்டுக்குருவிகளால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகள், அவை அழிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Body:இன்று உலக சிட்டுக்குருவி தினமாகும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தை சேர்ந்த சிட்டுக்குருவி நம் வீடுகளில் அழையா விருந்தாளிகளாக வந்து கூரைகளில் தங்கி நம் உறவினர்கள் போன்றே நம்மோடு வாழும்.
நெல்வயல்களில் பூச்சிகளை அழித்து நெற்பயிரை காப்பாற்றும் விவசாயிகளின் நண்பனான சிட்டுக்குருவி ஒரு காலத்தில் எங்கும் காணப்பட்டது. ஆனால் இப்போது அது கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் காணப்பட்டாலும் நகரங்களில் அதை பார்க்க முடிவதில்லை.
இதற்கு சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமைகின்றன. நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த அலைகள் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது.
இந்த சிட்டுக் குருவி இனம் அழிவதை தடுத்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.