ETV Bharat / state

தற்காலிக காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவுக் கூடம்

author img

By

Published : Apr 7, 2020, 3:30 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தற்காலிக காய்கறிச் சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் நுழைவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம்
கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள் ஓடாமல் இருந்த வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம்
இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு அதிகளவு பொது மக்கள் வருகின்ற காரணத்தால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தொழில் கூட்டமைப்பு உதவியுடன் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தைக்கு வரும் அனைவரும் இந்தக் கூடம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இந்தக் கூடத்திற்குள் நுழைந்ததும் தானியங்கி முறையில் உள்ளே நுழையும் பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும். இதன் மூலம் கரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புக்கான மருந்துகள் இந்தியர்களுக்கே முதலில் கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள் ஓடாமல் இருந்த வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

கிருமிநாசினி தெளிக்கும் நுழைவு கூடம்
இந்நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு அதிகளவு பொது மக்கள் வருகின்ற காரணத்தால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தொழில் கூட்டமைப்பு உதவியுடன் தற்காலிக காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சந்தைக்கு வரும் அனைவரும் இந்தக் கூடம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இந்தக் கூடத்திற்குள் நுழைந்ததும் தானியங்கி முறையில் உள்ளே நுழையும் பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும். இதன் மூலம் கரோனா நோயை கட்டுப்படுத்த முடியும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புக்கான மருந்துகள் இந்தியர்களுக்கே முதலில் கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.