ETV Bharat / state

'உலகின் ஆதி மனிதன் தோன்றிய கண்டம் குமரி கண்டம்தான்'

author img

By

Published : Jul 14, 2019, 1:25 PM IST

கன்னியாகுமரி: உலகத்திலேயே ஆதி மனிதன் தோன்றிய கண்டம் குமரி கண்டம்தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக இருப்பதாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

KUMARIKANDAM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்குமரி தமிழ்ச் சங்கம் சார்பில் குமரி கண்டம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர் இதில் பங்கேற்ற டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமரி கண்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், கி.பி. 19ஆம் நூற்றாண்டு முதல் குமரி கண்டம் குறித்த ஆய்வு தீவரமடைந்துள்ளதாகவும், லெமோரியா கண்டம் என்று அழைக்கப்படும் தற்போதைய பெயர் ஆரம்ப காலத்தில் குமரி கண்டமாக இருந்தததாகவும், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிகா வரை குமரி கண்டம் பரவி இருந்தததாகவும் தெரிவித்தார்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன்

மேலும், உலகின் ஆதி மனிதன் முதன் முதலாக தோன்றிய கண்டம் குமரி கண்டம் தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக இருப்பதாகவும், இந்த கருத்து வெளியானால் உலகத்திற்கே தமிழ் முன்னோடி என்ற பெருமை நமக்கு கிடைக்கும் எனவும், நமது பண்பாட்டின் ஆதாரம், தமிழ் நாட்டின் பெருமை, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் சமூகத்தின் பெருமை எல்லாம் ஆய்வின் மூலம் முழுமையாக வெளிவரும் எனவும் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தென்குமரி தமிழ்ச் சங்கம் சார்பில் குமரி கண்டம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர் இதில் பங்கேற்ற டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமரி கண்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், கி.பி. 19ஆம் நூற்றாண்டு முதல் குமரி கண்டம் குறித்த ஆய்வு தீவரமடைந்துள்ளதாகவும், லெமோரியா கண்டம் என்று அழைக்கப்படும் தற்போதைய பெயர் ஆரம்ப காலத்தில் குமரி கண்டமாக இருந்தததாகவும், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிகா வரை குமரி கண்டம் பரவி இருந்தததாகவும் தெரிவித்தார்.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சுதா சேஷய்யன்

மேலும், உலகின் ஆதி மனிதன் முதன் முதலாக தோன்றிய கண்டம் குமரி கண்டம் தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக இருப்பதாகவும், இந்த கருத்து வெளியானால் உலகத்திற்கே தமிழ் முன்னோடி என்ற பெருமை நமக்கு கிடைக்கும் எனவும், நமது பண்பாட்டின் ஆதாரம், தமிழ் நாட்டின் பெருமை, தமிழ் மொழியின் பெருமை, தமிழ் சமூகத்தின் பெருமை எல்லாம் ஆய்வின் மூலம் முழுமையாக வெளிவரும் எனவும் சுதா சேஷய்யன் கூறியுள்ளார்.

Intro:உலகத்திலேயே ஆதி மனிதன் தோன்றிய கண்டம் குமரி கண்டம்தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக உள்ளது என நாகர்கோவிலில் நடந்த பன்முக பார்வையில் குமரி கண்டம் என்ற கருத்தரங்கில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் சுதா சேசையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Body:TN_KNK_05_KUMARIKANDAM_CONFERENCE_SCRIPT_TN10005

எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி
உலகத்திலேயே ஆதி மனிதன் தோன்றிய கண்டம் குமரி கண்டம்தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக உள்ளது என நாகர்கோவிலில் நடந்த பன்முக பார்வையில் குமரி கண்டம் என்ற கருத்தரங்கில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் சுதா சேசையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென்குமரி தமிழ் சங்கம் சார்பில் குமரி கண்டம் என்ற என்ற கருத்தரங்கம் நாகர்கோவில் கோட்டாரில் நடந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், உலக தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு பின்னர் இதில் பங்கேற்ற டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணை வேந்தர் சுதா சேசையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமரி கண்டம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. கி.பி. 19 – ம் நூற்றாண்டு முதல் குமரி கண்டம் குறித்த ஆய்வு தீவிரமானது. லேமொரியா கண்டம் என்று அழைக்கப்படும் தற்போதைய பெயர் ஆரம்ப காலத்தில் குமரி கண்டமாக இருந்தது. குமரி கண்டம் நாம் நினைப்பது போல் சிறியது இல்லை. மிகவும் பெரியது. ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிகா, வரை குமரி கண்டம் பரவி இருந்தது. உலகத்திலேயே ஆதி மனிதன் முதன் முதலாக தோன்றிய கண்டம் குமரி கண்டம் தான் என்ற கருத்து விரைவில் ஆய்வுகள் மூலம் வெளியாக உள்ளது. இந்த கருத்து வெளியானால் உலகத்திற்கே தமிழ் முன்னோடி என்ற பெருமை நமக்கு கிடைக்கும். குமரி கண்டம் குறித்த ஆய்வுகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். பெரியவர்கள் ஆய்வுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகள் ஆய்வில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். இது நமது பண்பாட்டின் ஆதாரம். தமிழ் நாட்டின் பெருமை., தமிழ் மொழியின் பெருமை, தமிழ் நாகரீகத்தின் பெருமை, தமிழ் சமூகத்தின் பெருமை எல்லாம் ஆய்வின் மூலம் முழுமையாக வெளிவரும் என்றார். நிகழ்ச்சியில் தென்குமரி தமிழ் சங்க தலைவர் ராஜகோபால், ஒருங்கிணைந்த பெருங்கடல் சார் பண்பாட்டு நடுவ தலைவர் ஒரிசா பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.