ETV Bharat / state

சேதமடைந்த மெகா சுற்றுலாத் திட்டப்பணி!

கன்னியாகுமரி: மக்கள் வரிப்பணத்தில் ரூ14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியதைக் கண்டித்து மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Jun 19, 2019, 8:53 AM IST

கன்னியாகுமரி

கன்னியாகுமரி: மக்கள் வரிப்பணத்தில் ரூ.14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியதைக் கண்டித்து மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை உதவியுடன் ரூ.14 கோடி செலவில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை அறிவித்தது. அதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முழுமைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காந்தி மண்டபம் முன்பு முக்கோண பூங்கா, கடற்கரையில் சுனாமி பூங்கா, சுகாதார வளாகம், பேட்டரி கார், உயர்கோபுர மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை அமைத்து சென்னை மெரினா கடற்கரைக்கு இணையாக கன்னியாகுமரி கடற்கரையை பயணிகள் ரசிக்கும் வண்ணம் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தும் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்க தவறியதால் இவை அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கொண்டுவரப்பட்ட அலங்கார நடைபாதை, புல்தரை மின்விளக்குகள் ஆகியவற்றை பராமரிக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி: மக்கள் வரிப்பணத்தில் ரூ.14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியதைக் கண்டித்து மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை உதவியுடன் ரூ.14 கோடி செலவில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை அறிவித்தது. அதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முழுமைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காந்தி மண்டபம் முன்பு முக்கோண பூங்கா, கடற்கரையில் சுனாமி பூங்கா, சுகாதார வளாகம், பேட்டரி கார், உயர்கோபுர மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை அமைத்து சென்னை மெரினா கடற்கரைக்கு இணையாக கன்னியாகுமரி கடற்கரையை பயணிகள் ரசிக்கும் வண்ணம் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தும் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்க தவறியதால் இவை அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கொண்டுவரப்பட்ட அலங்கார நடைபாதை, புல்தரை மின்விளக்குகள் ஆகியவற்றை பராமரிக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திறப்பு விழா காணப்படாமலேயே சேதமடைந்த கன்னியாகுமரி மெகா சுற்றுலா திட்டப்பணி.
கன்னியாகுமரியில் மக்கள் வரிப்பணம் 14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலா திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியது மீண்டும் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


Body:திறப்பு விழா காணப்படாமலேயே சேதமடைந்த கன்னியாகுமரி மெகா சுற்றுலா திட்டப்பணி.
கன்னியாகுமரியில் மக்கள் வரிப்பணம் 14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலா திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியது மீண்டும் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கிலும் மத்திய அரசின் சுற்றுலா துறை உதவியுடன் 14 கோடி செலவில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை அறிவித்தது கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கிய இந்த திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முழுமை பெறும் என அறிவிக்கப்பட்டது ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருவதாக பல்வேறு தரப்பிலும் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் 14 கோடி இல் காந்தி மண்டபம் முன்பு முக்கோண பூங்கா கடற்கரையில் சுனாமி பூங்கா சுகாதார வளாகம் பேட்டரி கார் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல் சுற்றுலா வரவேற்பு மையம் மற்றும் சென்னை மெரினா பீச்சுக்கு இணையாக கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் அழகுபடுத்த காட்சிக் கோபுரம் முதல் சிலுவை நகர் மற்றும் சிலுவை நகர் தொடங்கி சன்செட் பாயிண்ட் வரையிலான கடற்கரைப் பகுதியில் மின் விளக்கு வசதிகளுடன் கூடிய அலங்கார நடை பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அடங்கும்..
மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை கிடப்பில் போடப்பட்டது தற்போது கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு செய்யப்படாமல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது இதனால் 14 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் முற்றிலும் உயிர் எடுக்கப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் தான் சமூகவிரோத செயல்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாபயணிகளுக்காக எந்த நோக்கத்திற்காக மெகா சுற்றுலா திட்டம் கொண்டுவரப்பட்டது அந்தத் திட்டத்தை அலங்கார நடைபாதை புல்தரை மின்விளக்குகள் ஆகியவற்றை பராமரித்து பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.