ETV Bharat / state

குறிப்பிட்ட நேரத்துக்குள் பேருந்துகளை இயக்க வற்புறுத்தும் கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - கன்னியாகுமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

கன்னியாகுமரி: கல்லூரிப் பேருந்து ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் பேருந்துகளை இயக்க வற்புறுத்தும் கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன்
author img

By

Published : Oct 6, 2019, 3:06 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகலாகவும், வளைவாகவும் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளின் வாகன ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம், உட்கோட்ட போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடைபெற்றது. மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்த இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்லச்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி

இக்கூட்டத்தில் வாகன ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ”கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் தங்களின் லைசன்ஸை கல்வி நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வாகனங்களை இயக்க வற்புறுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படியுங்க:

‘தலைக்கவசமே தலையாய கவசம்’ - வலியுறுத்தும் காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகலாகவும், வளைவாகவும் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளின் வாகன ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம், உட்கோட்ட போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடைபெற்றது. மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்த இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்லச்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி

இக்கூட்டத்தில் வாகன ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ”கல்வி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் தங்களின் லைசன்ஸை கல்வி நிர்வாகத்தினர் வாங்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வாகனங்களை இயக்க வற்புறுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படியுங்க:

‘தலைக்கவசமே தலையாய கவசம்’ - வலியுறுத்தும் காவல்துறை

Intro:தனியார் கல்வி நிறுவனங்கள் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைத்திருப்பது தவறு. போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தகவல்.


Body:தனியார் கல்வி நிறுவனங்கள் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைத்திருப்பது தவறு. போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தகவல்.

தனியார் கல்வி நிறுவனங்கள் தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ்சை வாங்கி வைத்திருப்பது சட்டப்படி தவறு என்று கன்னியாகுமரி எஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார். கன்னியாகுமரியில் உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி போக்குவரத்து பிரிவு எஸ்ஐ செல்லச்சாமி மற்றும் கன்னியாகுமரி சப் டிவிசனுக்கு உட்பட்ட பள்ளி கல்லூரி நிறுவன வாகனங்களின் 150 க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பள்ளி வாகன டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் டிஎஸ்பி பாஸ்கரன் கூறியதாவது:- கன்னியாகுமரியை பொருத்தவரை குறுகலான,வளைவான சாலைகள் என்பதால் இது குறித்து அறியாத வெளியூர் நபர்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக பள்ளி கல்லூரி நிறுவனங்களும் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன. எனவே கல்வி நிறுவனங்கள் கல்வி நிறுவன வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் அழைத்துச் செல்லும் குழந்தைகள் உயிருக்கு மதிப்பளித்து பொறுப்புடன் நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் நேரத்துக்குள் மாணவர்களை அழைத்து வர வேண்டும் என ஒரு சில கல்வி நிறுவனங்கள் வாகன டிரைவர்கள் அறிவுறுத்துகின்றனர் .மேலும் வேலை பார்க்கும் கல்லூரி பள்ளி நிறுவன நிர்வாகிகள் தங்களின் ஒரிஜினல் லைசன்ஸ் வாங்கி வைத்திருப்பதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர் .இது சட்டப்படி தவறாகும். ஒரிஜினல் லைசென்ஸ் வாகன ஓட்டும் டிரைவர்கள் இடம் தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வாகனங்களை இயக்க வற்புறுத்தக் கூடாது என்றும் ஒரிஜினல் லைசென்சை வாங்கி வைத்திருக்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி பள்ளி நிறுவன நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.