ETV Bharat / state

அதிக விலைக்கு போன மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி: மீன்பிடி தடைக்காலம் முடிவுற்றதையடுத்து மீனவர்களுக்கு பெரிய மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தாலும் சிறிய வகையிலான மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது.

Fisher man
author img

By

Published : Jun 16, 2019, 1:42 PM IST

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்கள் போடப்பட்ட மீன் தடைக்காலம் நேற்றைய (ஜூன் 15) தினம் முடிவடைந்தது. இதனையடுத்து சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

பின் இன்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கையில், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றோம். பெரிய மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தாலும் சிறிய வகையிலான மீன்கள் அதிக அளவில் கிடைத்தாக தெரிவித்தனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சீலா போன்ற மீன்களும் - பாறை, சாளை போன்ற மீன்களும் அதிகமாக கிடைத்தன. இரண்டு மாதங்கள் எந்த வருமானமும் இல்லாமல் இருந்துவிட்டு கடலுக்குச் சென்று இவ்வளவு மீன்கள் கிடைத்தது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் எடுக்க அதிக அளவில் கேரள வியாபாரிகள் குவிந்தனர். இதனால் மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போனது.

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்கள் போடப்பட்ட மீன் தடைக்காலம் நேற்றைய (ஜூன் 15) தினம் முடிவடைந்தது. இதனையடுத்து சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

பின் இன்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கையில், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றோம். பெரிய மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தாலும் சிறிய வகையிலான மீன்கள் அதிக அளவில் கிடைத்தாக தெரிவித்தனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சீலா போன்ற மீன்களும் - பாறை, சாளை போன்ற மீன்களும் அதிகமாக கிடைத்தன. இரண்டு மாதங்கள் எந்த வருமானமும் இல்லாமல் இருந்துவிட்டு கடலுக்குச் சென்று இவ்வளவு மீன்கள் கிடைத்தது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் எடுக்க அதிக அளவில் கேரள வியாபாரிகள் குவிந்தனர். இதனால் மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போனது.

TN_KNK_01_16_FISHERMEN_FISH_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பினர். எதிர்பார்த்த அளவிலான பெரிய மீன்கள் கிடைக்காவிட்டாலும் அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்தனர், மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கி. நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதையடுத்து சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 60 நாட்கள் கழித்து கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற மீனவர்களுக்கு பெரிய மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தாலும் சிறிய வகையிலான மீன்கள் அதிக அளவில் கிடைத்தாக மீனவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் 2 மாதங்கள் எந்த வருமானமும் இல்லாமல் இருந்துவிட்டு கடலுக்கு சென்று இவ்வளவு மீன்கள் கிடைத்த்து தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் சீலா,போன்ற மீன்களும் பாறை, சாளை போன்ற மீன்கள் அதிகமாக கிடைத்தன. கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீன் பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம் எடுக்க அதிக அளவில் கேரள வியாபாரிகள் குவிந்தனர். இதனால் மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போனது. விஷுவல் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.