ETV Bharat / state

கல்லூரி மாணவர்களின் வாகனங்கள் பறிமுதல்: காவல் துறை நடவடிக்கை

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே உரிய ஆவணங்களின்றி வந்த தனியார் கல்லூரி மாணவர்களின் வாகனங்களை சோதனையிட்டு அதிரடி காட்டிய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

author img

By

Published : Jan 22, 2020, 2:51 PM IST

college students bike captured
college students bike captured

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைத் தடுக்கும்விதமாக சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி கன்னியாகுமரி காவல் துறை சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். மேலும் பல இடங்களில் திடீர் அதிரடி ஆய்வுகளைச் செய்துவருகிறார்.

இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சென்ற அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் அனைவரையும் தடுத்து சோதனையிட்டார்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய ஆவணம் இன்றியும், தலைக்கவசம் இல்லாமலும் வந்ததைக் கண்டறிந்த அவர், பின் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல்செய்து கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நிறுத்திவைக்க செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களை எச்சரித்த காவல் துணை கண்காணிப்பாளர் உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கியதுடன், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார்.

மேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆவணங்கள் இல்லாதவர்கள் அனைத்து ஆவணங்களையும் எடுப்பதுடன் முறையாக தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். அடுத்தமுறை சோதனையிடும்போது உரிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களைப் பறிமுதல் செய்யப்போவதாக எச்சரிக்கைவிடுத்தார்.

கல்லூரி மாணவர்களின் வாகனங்களை பறிமுதல்செய்த டி.எஸ்.பி.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துவிடுவதாக அவரிடம் உறுதியளித்தனர்.

பின்னர் அவர்களை எச்சரித்த காவல் துணை கண்காணிப்பாளர் பறிமுதல்செய்த வாகனங்களை மாணவர்களிடம் திருப்பி அளிக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இளம் தலைமுறைக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மாவட்ட காவல் துமை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: நெருங்கும் குடியரசு தினம் - உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைத் தடுக்கும்விதமாக சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி கன்னியாகுமரி காவல் துறை சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார். மேலும் பல இடங்களில் திடீர் அதிரடி ஆய்வுகளைச் செய்துவருகிறார்.

இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சென்ற அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் அனைவரையும் தடுத்து சோதனையிட்டார்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய ஆவணம் இன்றியும், தலைக்கவசம் இல்லாமலும் வந்ததைக் கண்டறிந்த அவர், பின் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல்செய்து கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நிறுத்திவைக்க செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களை எச்சரித்த காவல் துணை கண்காணிப்பாளர் உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கியதுடன், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார்.

மேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆவணங்கள் இல்லாதவர்கள் அனைத்து ஆவணங்களையும் எடுப்பதுடன் முறையாக தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். அடுத்தமுறை சோதனையிடும்போது உரிய ஆவணங்களின்றி வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களைப் பறிமுதல் செய்யப்போவதாக எச்சரிக்கைவிடுத்தார்.

கல்லூரி மாணவர்களின் வாகனங்களை பறிமுதல்செய்த டி.எஸ்.பி.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துவிடுவதாக அவரிடம் உறுதியளித்தனர்.

பின்னர் அவர்களை எச்சரித்த காவல் துணை கண்காணிப்பாளர் பறிமுதல்செய்த வாகனங்களை மாணவர்களிடம் திருப்பி அளிக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இளம் தலைமுறைக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மாவட்ட காவல் துமை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: நெருங்கும் குடியரசு தினம் - உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தனியார் கல்லூரி மாணவர்களின் வாகனங்களை சோதனையிட்டு அதிரடி காட்டிய டிஎஸ்பி. உரிய ஆவணங்களின்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, ஒருவாரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் எடுக்க வேண்டும் என்று எச்சரித்து வாகனங்களை மாணவர்களிடம் திருப்பி அளித்தார்.


Body:தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிஎஸ்பி பாஸ்கரன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பல இடங்களில் திடீர் அதிரடி ஆய்வுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்ற அவர் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர்கள் அனைவரையும் தடுத்து சோதனையிட்டார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உரிய ஆவணம் இன்றியும், தலைக்கவசம் இல்லாமலும் வந்ததை கண்டறிந்தார். பின்னர் அந்த வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து கல்லூரி வாசல் முன்பு வரிசையாக நிறுத்தி வைக்க செய்தார்.
இதனை தொடர்ந்து மாணவர்களை எச்சரித்த டிஎஸ்பி பாஸ்கரன் உரிய ஆவணம் இன்றி வாகனம் ஓட்டினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கியதுடன், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தினார்.
மேலும் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஆவணங்கள் இல்லாதவர்கள் அனைத்து ஆவணங்களையும் எடுப்பதுடன் முறையாக தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும். அடுத்த முறை சோதனையிடும் போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்து விடுவதாக அவரிடம் உறுதியளித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்த டிஎஸ்பி பாஸ்கரன் பறிமுதல் செய்த வாகனங்களை மாணவர்களிடம் திருப்பி அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Conclusion:இளம் தலைமுறைக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வாசலில் நின்று கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்து எச்சரித்து அனுப்பிய டிஎஸ்பிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.