ETV Bharat / state

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு!

குமரி: இந்தியாவில் உள்ள மற்றமாநிலங்களைவிட தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என டாக்டர் காளியப்பன் தெரிவித்துள்ளார்.

Compared to other states, there are fewer cancer victims in Tamil Nadu
author img

By

Published : Sep 7, 2019, 9:06 PM IST

தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் 23ஆவது மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிற இந்த மாநாட்டினை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ஆர்.பாலாஜி நாதன் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கேன்சர் நோய்குறித்து பேசிய காளியப்பன்

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு குறைவாகும். தற்போது புற்று நோயாளிகள் முறையாக மருந்துகளை உட்கொண்டாலே அந்நோயில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

மற்ற காரணிகளைவிட புகையிலை, போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புகையிலை பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் 23ஆவது மாநாடு கன்னியாகுமரியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிற இந்த மாநாட்டினை கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ஆர்.பாலாஜி நாதன் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு,புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கேன்சர் நோய்குறித்து பேசிய காளியப்பன்

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு குறைவாகும். தற்போது புற்று நோயாளிகள் முறையாக மருந்துகளை உட்கொண்டாலே அந்நோயில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

மற்ற காரணிகளைவிட புகையிலை, போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புகையிலை பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும்" என்றார்.

Intro:ஆண்டுதோறும் புதிதாக 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன் தெரிவித்தார்.Body:tn_knk_02_medical_conferance_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

ஆண்டுதோறும் புதிதாக 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன் தெரிவித்தார்.



தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் 23வது மாநாடு கன்னியாகுமரியில் துவங்கியது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்த மாநாட்டினை கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர்(டீன்) டாக்டர் ஆர்.பாலாஜி நாதன் துவக்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு பின் தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.காளியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் புற்று நோய் பாதிப்பு குறைவாகும். குமரி மாவட்டம், இயல்பாகவே புற்று நோய் தாக்கம் நிறைந்த பகுதியாகும். ஏனெனில், இங்குள்ள கடல் பகுதி மணலின் கதிர்வீச்சு தாக்கத்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது.ஆங்கிலேயர் காலத்திலயே, குமரி மாவட்டம், நெய்யூரில் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சைக்கென மருத்துவமனை உருவாக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைக்குகம் புற்று நோய் பாதிப்புகள் உள்ளன. இருப்பினும், இவற்றுக்கு சிகிச்சையளிக்க முடியும். மருத்துவ துறையில் உள்ள பழைய தொழில்நுட்பங்களால், புற்றுநோய் செல்களை கண்டறிய முடியாது. ஆனால், தற்போது அம்மாதிரியான சூழல் இல்லை. அதாவது, இந்தியாவில் அமெரிக்காவுக்கு இணையான அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் வந்துவிட்டன. ஆகையால் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முழுமையாக குணமடையும் வாய்ப்புள்ளது. தற்போது புற்று நோய் பாதிப்பு என்றால் மக்களிடையே அச்சம் ஏற்படுவதோடு, அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வு குறைவாக தான் உள்ளது.

தற்போது புற்று நோயாளிகள் முறையாக மருந்துகளை உட்கொண்டால், அந்நோயில் இருந்து முழுமையாக குணமாகலாம். அதே போன்று புற்று நோய்க்கென சிகிச்சை எடுக்கும் போது உடல் சார்ந்த வலிகள், தொல்லைகளை குறைக்கும் வகையிலும் மருந்துகள் வந்துவிட்டன. மற்ற காரணிகளை விட, புகையிலை, போதை பொருள்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புகையிலை பழக்கம் போன்றவற்றை கைவிட வேண்டும். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புற்று நோய் செல்களை எளிதில் கண்டறிந்து, அதற்கென மருந்துகளை எடுத்து கொண்டால் விரைவில் குணமடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.