ETV Bharat / state

CCTV; கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்துச்சென்ற முதியவர்

author img

By

Published : Oct 24, 2022, 9:40 PM IST

கன்னியாகுமரியில் கையில் கத்தியுடன் நகைக்கடைக்குள் நுழைந்த நபர் ஒருவர், கத்தியாலேயே கண்ணாடி பெட்டிகளை உடைத்து நகைகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்து சென்ற முதியவர்
கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்து சென்ற முதியவர்

கன்னியாகுமரி: கருங்கல் தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்(48), தொலையாவட்டம் சந்திப்பில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று கையில் வெட்டு கத்தியுடன் நகைக்கடைக்குள் அத்துமீறி நுழைந்த முதியவர் ஒருவர் கடை உரிமையாளரை மிரட்டி, நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைகளை வெட்டு கத்தியால் உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துச்சென்றுள்ளார்.

கண்ணாடிகளை வெட்டி உடைத்தபோது அதில் இருந்து சிதறிய கண்ணாடி துண்டுகள் உடலில் பட்டு மரியதாஸுக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மரியதாஸ் கருங்கல் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் கருங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், நகையைத் திருடிச்சென்றது மாங்கரை பகுதியைச்சேர்ந்த ரெத்தினவேல் (55) என்பது தெரியவந்துள்ளது.

கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்து சென்ற முதியவர்

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற ரெத்தினவேலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: இளைஞரிடம் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் பறிப்பு... பாதசாரிகள் கவனம்...

கன்னியாகுமரி: கருங்கல் தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்(48), தொலையாவட்டம் சந்திப்பில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று கையில் வெட்டு கத்தியுடன் நகைக்கடைக்குள் அத்துமீறி நுழைந்த முதியவர் ஒருவர் கடை உரிமையாளரை மிரட்டி, நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைகளை வெட்டு கத்தியால் உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துச்சென்றுள்ளார்.

கண்ணாடிகளை வெட்டி உடைத்தபோது அதில் இருந்து சிதறிய கண்ணாடி துண்டுகள் உடலில் பட்டு மரியதாஸுக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மரியதாஸ் கருங்கல் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் கருங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், நகையைத் திருடிச்சென்றது மாங்கரை பகுதியைச்சேர்ந்த ரெத்தினவேல் (55) என்பது தெரியவந்துள்ளது.

கத்தியுடன் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்து சென்ற முதியவர்

இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற ரெத்தினவேலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: இளைஞரிடம் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் பறிப்பு... பாதசாரிகள் கவனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.