ETV Bharat / state

குமரியில் மீண்டும் தொடங்கியது படகு சேவை - சுற்றலாப் பயணிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Nov 24, 2020, 9:27 PM IST

கன்னியாகுமரி: குமரியில் பல மாதங்களுக்கு பிறகு படகு சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

boating service starts
boating service starts

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் இன்றி குமரி கடல் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பகவதியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனிடையே, சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா குறித்து ஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10ஆம் தேதி நாகர்கோவில் வந்த முதலமைச்சர் பழனிசாமி, கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறையாக வராததால், படகு சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே, படகு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இன்று மாலை (நவம்பர் 24) படகு சேவை தொடங்கிய நிலையில், சோதனை ஒட்டமாக கடலில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும் கரை திரும்பியது.

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் இன்றி குமரி கடல் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பகவதியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனிடையே, சுவாமி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா குறித்து ஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10ஆம் தேதி நாகர்கோவில் வந்த முதலமைச்சர் பழனிசாமி, கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறையாக வராததால், படகு சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே, படகு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இன்று மாலை (நவம்பர் 24) படகு சேவை தொடங்கிய நிலையில், சோதனை ஒட்டமாக கடலில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும் கரை திரும்பியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.