ETV Bharat / state

குமரியில் சொந்தக்கட்சியினருக்கே கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி!

author img

By

Published : Nov 18, 2019, 1:03 PM IST

கன்னியாகுமரி: அதிமுக மாவட்டச் செயலாளர் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் புகார் மனு அளித்துள்ளார்.

aiadmk

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுகச் செயலாளராக இருந்து வருபவர் எஸ்.ஏ. அசோகன். இவர் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். அண்மைக் காலமாக இவர் தொண்டர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தொண்டர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் தன்னைப்பற்றி வந்த தவறான தகவலுக்குக் காரணம் அதிமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்துகுமார் என நினைத்த அசோகன் ஃபோனிலும், நேரிலும் முத்துகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துகுமார் பூதப்பாண்டி காவல் நிலையத்திலும் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.

கொலை மிரட்டல் விடுத்த மாவட்டச் செயலாளரின் ஆடியோ

இதற்கிடையில், அவரது மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இது குறித்து தொண்டர்கள் தலைமைக்குத் தகவல் கொடுத்தும், முறையான நடவடிக்கை இல்லை எனத் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி? - அமைச்சர் கே.சி. வீரமணி உளறல்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுகச் செயலாளராக இருந்து வருபவர் எஸ்.ஏ. அசோகன். இவர் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார். அண்மைக் காலமாக இவர் தொண்டர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தொண்டர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் தன்னைப்பற்றி வந்த தவறான தகவலுக்குக் காரணம் அதிமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்துகுமார் என நினைத்த அசோகன் ஃபோனிலும், நேரிலும் முத்துகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துகுமார் பூதப்பாண்டி காவல் நிலையத்திலும் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.

கொலை மிரட்டல் விடுத்த மாவட்டச் செயலாளரின் ஆடியோ

இதற்கிடையில், அவரது மிரட்டல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், இது குறித்து தொண்டர்கள் தலைமைக்குத் தகவல் கொடுத்தும், முறையான நடவடிக்கை இல்லை எனத் தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி? - அமைச்சர் கே.சி. வீரமணி உளறல்!

Intro:கன்னியாகுமரி: குமரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறி அக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்து குமார் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவர் பேசிய மிரட்டல் ஆடியோ வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Body:கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருபவர் எஸ்.ஏ. அசோகன். இவர் குமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். அண்மை காலமாக தொண்டர்களை மிரட்டுவதும் தகாத வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்ட குற்றசாட்டுகள் தொண்டர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக்கில் தவறான தகவல் வந்ததாகவும் அதற்கு காரணம் அதிமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முத்து குமார் தான் என நினைத்து அவரை போனிலும், நேரிடையாகவும் குமரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறி பூதப்பாண்டி காவல் நிலையம் மற்றும் நாகர்கோவிலில் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்திலும் முத்து குமார் புகார் மனு அளித்து உள்ளார்.
இதற்கிடையில் அவர் பேசிய மிரட்டல் ஆடியோ வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து தொண்டர்கள் தலைமைக்கு தகவல் கொடுத்ததும் தலைமை கண்டுகொள்ளவில்லை என தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.