ETV Bharat / state

12வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோவில் கைது!

author img

By

Published : Nov 19, 2019, 3:22 AM IST

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kumari

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(55). இவர் சுசீந்திரம் பகுதியில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை சுசீந்திரம் பகுதியில் பேப்பர் போட்டுக்கொண்டிருக்கும் போது, பேப்பர் வாங்க வந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.

அனைத்து மகளிர் காவல்நிலையம்

சத்தம் கேட்டு, மாணவியின் பெற்றோர் வருவதற்குள் பாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, பாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் பாலன்(55). இவர் சுசீந்திரம் பகுதியில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை சுசீந்திரம் பகுதியில் பேப்பர் போட்டுக்கொண்டிருக்கும் போது, பேப்பர் வாங்க வந்த 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.

அனைத்து மகளிர் காவல்நிலையம்

சத்தம் கேட்டு, மாணவியின் பெற்றோர் வருவதற்குள் பாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, பாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!

Intro:சுசீந்திரம் அருகே 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பறக்கையைச்சேர்ந்த பேப்பர் போடும் தொழிலாளி பாலன்(55) என்பவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Body:tn_knk_04_pokso_womenpolice_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சுசீந்திரம் அருகே 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பறக்கையைச்சேர்ந்த பேப்பர் போடும் தொழிலாளி பாலன்(55) என்பவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமுரி மாவட்டம் பறக்கையை சேர்ந்தவர் பாலன்(55). இவர் சுசீந்திரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலையில் சுசீந்திரம் பகுதியில் பேப்பர் போட்டுக்கொண்டிருக்கும் அவரிடம் பேப்பர் வாங்க வந்த 12 வயது மாணவியை கட்டி பிடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு ஓடி மாணவியின் பெற்றோர் ஓடி வருவதற்குள் பாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.