ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Jan 23, 2021, 12:27 PM IST

காஞ்சிபுரம்: மாத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற 12ஆம் வகுப்பு முடித்த இரு மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கந்தன்(18), பார்த்திபன்(18), பாலாஜி(18). நண்பர்களான இவர்கள் மூவரும் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி படிப்பில் சேரவிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் மூவரும் வல்லக்கோட்டையிலிருந்து ஒரகடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

வாகனத்தை கந்தன் ஓட்டியுள்ளார் பின்னால் பார்த்திபன், பாலாஜி ஆகியோர் அமர்ந்திருந்தனர். வல்லக்கோட்டை அடுத்த மாத்தூரை கடந்தபோது இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வேனை முந்தி செல்லும்போது வேனில் உரசி விபத்துக்குள்ளானதில் மூவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

இதில் கந்தன், பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பாலாஜி தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது குறித்து ஒரகடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கந்தன்(18), பார்த்திபன்(18), பாலாஜி(18). நண்பர்களான இவர்கள் மூவரும் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி படிப்பில் சேரவிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் மூவரும் வல்லக்கோட்டையிலிருந்து ஒரகடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

வாகனத்தை கந்தன் ஓட்டியுள்ளார் பின்னால் பார்த்திபன், பாலாஜி ஆகியோர் அமர்ந்திருந்தனர். வல்லக்கோட்டை அடுத்த மாத்தூரை கடந்தபோது இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வேனை முந்தி செல்லும்போது வேனில் உரசி விபத்துக்குள்ளானதில் மூவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

இதில் கந்தன், பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பாலாஜி தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இது குறித்து ஒரகடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.