ETV Bharat / state

அத்திரவரதர் திருவிழா: 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு பெற பக்தர்கள் காத்திருப்பு - Varadharaja perumal koyil

காஞ்சிபுரம்: அத்திரவரதர் திருவிழாவில் கலந்து கொள்ளவிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காஞ்சிபுரம்
author img

By

Published : Jun 26, 2019, 11:41 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இத்திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்திவிட்டு பேருந்து மூலமாக கோயில் அருகே வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

மேலும், காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள வாகனங்கள் வைத்திருக்கும் பக்தர்கள் முன்னேற்பாடாக அனுமதி சீட்டு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.

இதன்படி, இன்று காலை 8 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் குவிந்தனர். இந்த அனுமதி சீட்டினை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கினர்.

அத்திரவரதர் திருவிழாவிற்கு அனுமதிச்சீட்டு வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இத்திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியூரிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்திவிட்டு பேருந்து மூலமாக கோயில் அருகே வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

மேலும், காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள வாகனங்கள் வைத்திருக்கும் பக்தர்கள் முன்னேற்பாடாக அனுமதி சீட்டு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.

இதன்படி, இன்று காலை 8 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் குவிந்தனர். இந்த அனுமதி சீட்டினை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கினர்.

அத்திரவரதர் திருவிழாவிற்கு அனுமதிச்சீட்டு வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு
Intro:Body:ஜூலை ஒன்றாம் தேதி நடைபெற உள்ள அத்திவரதர் திருவிழாவிற்கு உள்ளூர் மக்கள் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு அனுமதிச்சீட்டு வாங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மைதானத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் அனுமதிச் சீட்டு வாங்க காத்திருக்கிறார்கள்



ஜூலை ஒன்றாம் தேதி முதல் வெளியூர் மற்றும் பேருந்துகள் நகர்ப்பகுதிகளில் அனுமதி கிடையாது அவர்களுக்கு மூன்று தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அங்கு நிறுத்திவிட்டு வாகனங்களை உள்ளூர் பேருந்து மூலமாக கோவில் அருகே வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது காஞ்சிபுரம் நகர் பகுதியில் உள்ள வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அனுமதி சீட்டு பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார் அந்த வகையில் இன்று முதல் ஜூலை 1-ஆம் தேதிக்குள் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து இந்த நிலையில் காலை 8 மணி முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு அனுமதிச்சீட்டு பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து சார்பில் இந்த அனுமதி சீட்டு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டு வருகிறது
வாகனங்களில் கார் பேருந்து கனரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி லோடு ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு லாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று பொது மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிச்சீட்டு பெறலாம் என்று தெரிவித்த மாவட்ட நிர்வாகம் உரிய நிழல் குடை அல்லது பந்தல் அமைத்து இருந்தால் நன்றாக இருக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.