ETV Bharat / state

தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு - கொந்தளிக்கும் பி.ஆர்.பாண்டியன

author img

By

Published : Nov 7, 2019, 7:58 AM IST

காஞ்சிபுரம் : தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கென்று தனி ஒரு துறையில்லாதது வெட்கக்கேடான ஒன்று என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் சாடியுள்ளார்.

PR Pandian

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு உட்பட்ட வள்ளிபுரம் - எச்சூர் இடையே, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதன் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கருங்கற்களால் அமைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சரிந்து காணப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பணையைத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் சங்கத்தினருடன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் வாசிங்க : செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலாற்றின் குறுக்கே வீணாக சென்ற உபரி நீரைத் தடுத்து நிறுத்த தடுப்பணை கட்டிய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்.

ஆனால், அதற்காக பணிகள் மிகவும் மோசமாக மேற்கொள்ளப்பட்டதால் அணையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. எனவே, இந்த சுவரை கான்கிரீட்டில் அமைக்க வேண்டும்.

தடுப்பு சுவர் கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளது. ஊழல்வாதிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீதமுள்ள பாலாற்றின் குறுக்கே 7 கி.மீ., துரத்துக்கு தடுப்பணை அமைக்க வேண்டும்.

பி ஆர் பாண்டியன் பேட்டி

தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கு என்று தனியாக ஒரு துறை இல்லாதது வெட்கக்கேடானது" என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு உட்பட்ட வள்ளிபுரம் - எச்சூர் இடையே, சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அதன் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கருங்கற்களால் அமைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சரிந்து காணப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பணையைத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் சங்கத்தினருடன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் வாசிங்க : செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலாற்றின் குறுக்கே வீணாக சென்ற உபரி நீரைத் தடுத்து நிறுத்த தடுப்பணை கட்டிய தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்.

ஆனால், அதற்காக பணிகள் மிகவும் மோசமாக மேற்கொள்ளப்பட்டதால் அணையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்துள்ளது. எனவே, இந்த சுவரை கான்கிரீட்டில் அமைக்க வேண்டும்.

தடுப்பு சுவர் கட்டுமானத்தில் ஊழல் நடந்துள்ளது. ஊழல்வாதிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீதமுள்ள பாலாற்றின் குறுக்கே 7 கி.மீ., துரத்துக்கு தடுப்பணை அமைக்க வேண்டும்.

பி ஆர் பாண்டியன் பேட்டி

தமிழ்நாட்டில் நீர் பாசனத்திற்கு என்று தனியாக ஒரு துறை இல்லாதது வெட்கக்கேடானது" என்றார்.

Intro:வல்லிபுரத்திற்கும் எச்சூக்கும் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் உபரிநீர் நிரம்பி வழிவதையும் அதன் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் சரிந்து விழுந்ததை சீரமைக்கும் பணியை மேற்பார்வை இடவும் விவசாயிகளின் சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் உட்பட்ட வள்ளிபுரம் எச்சூர் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆனது சுமார் 30 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது .
இதன் பக்கவாட்டில் தடுப்பு சுவர் கருங்கற்களால் அமைத்ததால் சில நாட்களுக்கு முன்பு சரிந்து காணப்பட்டது இதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை தற்போது பணியை மேற்கொண்டு வருகின்றது.
இதனை இன்று மேற் பார்வையிடுவதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பாலாற்றின் குறுக்கே வீணாக சென்ற உபரி நீரை தடுத்து நிறுத்த தடுப்பணை கட்டிய தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து.
அதற்கான மேற்கொண்ட பணிகள் மிகவும் மோசமான நிலையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் பக்கவாட்டில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் கான்கிரீட்டில் அமைக்க வேண்டும்.
எனவும் முன்னதாக கட்டப்பட்ட தடுப்பு சுவரில் ஊழல் நடந்துள்ளதாக அதனை கண்டுபிடித்து வன்மையாக கண்டிக்க வேண்டும்.
எனவும் மீதமுள்ள கிராமங்களுக்கு பாலாற்றின் குறுக்கே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆந்திர தனது எல்லைவரை தடுப்பணை கட்டி நீரை சேமிப்பது போல் தமிழகத்திற்கு நீர் பாசனத்திற்கான ஒரு தனி அமைப்பு இல்லை எனவும் இது வெட்கக்கேடான செயல் எனவும் குறிப்பிட்டார் .
எனவே உடனடியாக பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு பாசனத்திற்கும் பொதுமக்கள் குடிப்பதற்கும் பயனுள்ளதாக நிறைவேற்றி தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Conclusion:முழு கொள்ளளவை எட்டிய தடுப்பணையை காண்பதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் தடுப்பணையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.