ETV Bharat / state

குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி..! - மக்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம்: குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீட்டு அருகே 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீரில் கலக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
author img

By

Published : Aug 25, 2019, 9:28 AM IST

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட வைகுண்டபுரம் தெருவில் சில மாதத்திற்கும் மேலாகக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீடு அருகே 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

தகவலறிந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட வைகுண்டபுரம் தெருவில் சில மாதத்திற்கும் மேலாகக் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீடு அருகே 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

தகவலறிந்து வந்த சிவகாஞ்சி காவல் துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீட்டுக்கு அருகே 50 கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.




Body:காஞ்சிபுரம் 4 வார்டு வைகுண்டபுரம் தெருவில் சில மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை என கண்டித்து நகராட்சி பொறுப்பு ஆணையர் வீட்டு அருகே காலி குடங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



வெயில் காலங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் நகராட்சி பப்புகளில் குடிநீர் உடன் சேர்ந்து கழிவுநீர் கலந்து வருவதாக பலமுறை நகராட்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத பொறுப்பு ஆணையர் வீடு அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி காவல் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடந்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர். Conclusion:இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்திலிருந்து வாலாஜாபாத், தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள் பாதிப்பு ஏற்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.