ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

விழுப்புரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Aug 13, 2019, 11:25 PM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபிக்கள் வரிசையில் பாஸ் இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்ததாக காவல் துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் கண்டித்துப் பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் இன்று விழுப்புரத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆட்சியர் பொன்னையாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபிக்கள் வரிசையில் பாஸ் இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்ததாக காவல் துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் கண்டித்துப் பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் இன்று விழுப்புரத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து காவலர் நலச்சங்கம் கண்ட கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆட்சியர் பொன்னையாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Intro:விழுப்புரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க சார்பில் விழுப்புரத்தில் இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது.


Body:காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் விஐபிகள் வரிசையில் 'பாஸ்' இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்ததாக காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் என்பவரை, காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் கண்டித்துப் பேசினார்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க சார்பில் இன்று விழுப்புரத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கு. சண்முகம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆட்சியர் பொன்னையாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


Conclusion:பின்னர் செய்தியாளரிடம் பேசிய கடலூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க தலைவர் நாகராஜன் கூறியதாவது.,

"கடந்த 9ஆம் தேதி காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ரமேஷை, மாவட்ட ஆட்சியர் பொன்னையன் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, ராஸ்கல் உன்னை சஸ்பெண்ட் செய்து விடுவேன்.

போலீஸ்காரர்கள் திமிர் பிடித்து அலையறீங்களா? கூப்பிடுடா அந்த ஐஜியை... என்று பேசி பொதுஇடத்தில் ஆய்வாளரை அவமானப்படுத்திய பொன்னையாவை தமிழக அரசு உடனடியாக தாற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.