ETV Bharat / state

சாலை விபத்து: 15க்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழப்பு! - Road accident near Sriperumbudur more than 15 cows are died

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் வாகனம் மோதி 15க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sriperumbudur
author img

By

Published : Sep 23, 2019, 10:17 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டிவைக்காமல் இருந்து வருவது வாடிக்கையான ஒன்று. இவர்களின் இந்த அலட்சியத்தால் அவ்வப்போது பசுமாடுகள் ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிவருகின்றன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் உரிமையாளர்களால் கட்டிவைக்கப்படாமல் விடப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையோரம் படுத்திருந்தபோது, அவ்வழியே வந்த வாகனம் பசுமாடுகள் மீது மேதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

உயிரிழந்த பசுக்களை வாகனத்தில் ஏற்றும் காட்சி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் கட்டிவைக்காமல் இருந்து வருவது வாடிக்கையான ஒன்று. இவர்களின் இந்த அலட்சியத்தால் அவ்வப்போது பசுமாடுகள் ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிவருகின்றன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தேசிய நெடுஞ்சாலையில் உரிமையாளர்களால் கட்டிவைக்கப்படாமல் விடப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையோரம் படுத்திருந்தபோது, அவ்வழியே வந்த வாகனம் பசுமாடுகள் மீது மேதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

உயிரிழந்த பசுக்களை வாகனத்தில் ஏற்றும் காட்சி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர். ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் வாகனம் மோதி 15க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்துள்ளது. சாலையோரம் படுத்திருந்த பசுக்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.


Body:
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பசு மாடுகளை இரவு நேரங்களில் சாலைகளில் விட்டுவிடுவது தொடர்கதையாகி வந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையில் மாடு உரிமையாளர்களால் கைவிடப்பட்ட பசுமாடுகள் சாலையில் இரவு நேரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியா வாகனம் மோதி 15க்கும் அதிகமான பசு மாடுகள் உயிரிழந்தது சாலையோரம் படுத்திருந்த பசுக்களை அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.Conclusion:வாகனம் மோதி பசு மாடுகள் உயிர் இழப்பு குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.