காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உலக பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலிருந்து வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அந்த வகையில் 1979 ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் தரிசனம் அளித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தரிசித்தார். இதனையடுத்து அங்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.