ETV Bharat / state

சமூக இடைவெளியைக் கண்காணிப்பதற்குத் தன்னார்வலர்களை களமிறக்கிய காவல்துறை!

காஞ்சிபுரம்: காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியைக் கண்காணிப்பதற்குத் தன்னார்வலர்களை காவல்துறையினர் களமிறக்கியுள்ளனர்.

author img

By

Published : Apr 6, 2020, 9:56 AM IST

சமூக இடைவெளியை கண்காணிக்க தன்னார்வலர்களை களமிறக்கிய காவல்துறை!
சமூக இடைவெளியை கண்காணிக்க தன்னார்வலர்களை களமிறக்கிய காவல்துறை!

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்கி செல்வதற்குத் தற்காலிகமாக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் நடைபெற்றுவரும் பணிகளை ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் காய்கறிகள் வாங்க வருகைதரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்குகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற 50 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர்.

காய்கறிச் சந்தையில் களமிறங்கிய தன்னார்வலர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்கி செல்வதற்குத் தற்காலிகமாக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் நடைபெற்றுவரும் பணிகளை ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் காய்கறிகள் வாங்க வருகைதரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்குகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற 50 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர்.

காய்கறிச் சந்தையில் களமிறங்கிய தன்னார்வலர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.