ETV Bharat / state

காஞ்சியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

காஞ்சிபுரம்: கரோனா பரவுதலைத் தடுக்க, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆலோசனை மேற்கொண்டார்.

author img

By

Published : Apr 26, 2020, 5:00 PM IST

கரோனா பாதுகாப்பு நடவடிக்கை
கரோனா பாதுகாப்பு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசியத் தேவையின்றி, மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிகிச்சைக்குப் பின், 9 பேர் வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேர் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கரோனா பரவுதலைத் தடுக்க அடுத்த கட்ட மருத்துவ, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலக குழுவினர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஊரடங்கு , சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை மக்கள் கடைப்பிடிக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன், மாவட்ட துணை ஆட்சியர் மாலதி, மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசியத் தேவையின்றி, மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிகிச்சைக்குப் பின், 9 பேர் வீடு திரும்பியுள்ளனர். குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீதமுள்ள 9 பேர் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் கரோனா பரவுதலைத் தடுக்க அடுத்த கட்ட மருத்துவ, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இன்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலக குழுவினர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஊரடங்கு , சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை மக்கள் கடைப்பிடிக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன், மாவட்ட துணை ஆட்சியர் மாலதி, மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.