ETV Bharat / state

ரேஷன் கார்டுடன் வங்கி, ஆதார் எண் இணைப்பு கட்டாயமா? - ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?

author img

By

Published : Dec 3, 2022, 10:00 PM IST

குடும்ப அட்டைவுடன் வங்கி எண், ஆதார் எண் இணைப்புக்கான காரணம் குறித்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

dr j radhakrishnan ias
dr j radhakrishnan ias

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஒருநாள் பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுதுறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்ய வருகை புரிந்தார்.

உலக ஊனமுற்றோர் தினத்தை ஒட்டி கூட்டுறவுத்துறை வங்கிகள் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓரிக்கை டெம்பிள் சிட்டி பகுதியில் செயல்படும் முன்மாதிரி நியாய விலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு முட்டை தூக்கும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்.

குடும்ப அட்டைவுடன் வங்கி எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயமா? - ராதாகிருஷ்ணன் பேட்டி

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,”தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்ப அட்டைதார்கள் உள்ளனர், அதில் 14.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே குடும்ப அட்டையில் வங்கி எண், ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி எண், ஆதார் எண் போன்றவற்றை இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் இணைக்கும் பணி நடைபெறுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் வங்கியின் எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒரு கிலோ மதுரை மல்லி விலை ரூ.3500

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஒருநாள் பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுதுறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்ய வருகை புரிந்தார்.

உலக ஊனமுற்றோர் தினத்தை ஒட்டி கூட்டுறவுத்துறை வங்கிகள் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓரிக்கை டெம்பிள் சிட்டி பகுதியில் செயல்படும் முன்மாதிரி நியாய விலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு அங்கு முட்டை தூக்கும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்.

குடும்ப அட்டைவுடன் வங்கி எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயமா? - ராதாகிருஷ்ணன் பேட்டி

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,”தமிழ்நாட்டில் 2.23 கோடி குடும்ப அட்டைதார்கள் உள்ளனர், அதில் 14.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே குடும்ப அட்டையில் வங்கி எண், ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி எண், ஆதார் எண் போன்றவற்றை இணைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் இணைக்கும் பணி நடைபெறுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் வங்கியின் எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை” என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒரு கிலோ மதுரை மல்லி விலை ரூ.3500

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.