ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கூச்சலிட்டுப் பிறந்தநாள் கொண்டாடிய மருத்துவர்கள் - அவதியுற்ற நோயாளிகள்!

காஞ்சிபுரம் :  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் பிறந்த நாள் கொண்டாடியதாகப் புகார் எழுந்துள்ளது.

author img

By

Published : Nov 6, 2019, 6:22 PM IST

doctor birthday

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு அனைத்து வித சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன .

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் பல்வேறு நோயாளிகள் தங்களது உடல் உபாதைகளுக்கு கொட்டும் மழையில் உள்நோயிக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு மருத்துவ அறைக்குச் சென்றபோது, நீண்ட நேரமாக மருத்துவர் வரவில்லை எனப்புகார் எழுந்துள்ளது.

பின்னர், இதுகுறித்து நோயாளிகள் விசாரித்தபோது, அருகில் உள்ள அறையில் மருத்துவர் ஒருவரின் பிறந்த நாளை அங்கிருந்த பிற மருத்துவர்கள், மருத்துவமனை அறையில் வைத்தே கூச்சலிட்டுக் கொண்டாடியது தெரிய வந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

இதனைக்கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த செவிலியர், மருத்துவ உதவியாளர்களிடம் கேட்டபோது தங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் செயல்பட வேண்டிய நிலையில், தனது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:

வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு அனைத்து வித சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன .

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் பல்வேறு நோயாளிகள் தங்களது உடல் உபாதைகளுக்கு கொட்டும் மழையில் உள்நோயிக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு மருத்துவ அறைக்குச் சென்றபோது, நீண்ட நேரமாக மருத்துவர் வரவில்லை எனப்புகார் எழுந்துள்ளது.

பின்னர், இதுகுறித்து நோயாளிகள் விசாரித்தபோது, அருகில் உள்ள அறையில் மருத்துவர் ஒருவரின் பிறந்த நாளை அங்கிருந்த பிற மருத்துவர்கள், மருத்துவமனை அறையில் வைத்தே கூச்சலிட்டுக் கொண்டாடியது தெரிய வந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

இதனைக்கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த செவிலியர், மருத்துவ உதவியாளர்களிடம் கேட்டபோது தங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் செயல்பட வேண்டிய நிலையில், தனது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:

வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை

Intro:காஞ்சிபுரம் 06.11.2019

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அதிகாலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாடியதால் நோயாளிகள் பெரும் அவதியுற்றனர்..

.Body:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை.இங்கு அனைத்து வித சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது .நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று அதிகாலையில் பல்வேறு நோயாளிகள் தங்களது உடல் உபாதைகளுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது உள் நோயிக்கான அனுமதிச்சீட்டு வாங்க மழையில் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மருத்துவ அறைக்கு சென்றபோது நீண்ட நேரமாக மருத்துவரை இல்லாதது கண்டு நோயாளிகள் விசாரித்த போது அருகில் உள்ள அறையில் மருத்துவர் ஒருவரின் பிறந்த நாளை மருத்துவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனை அறையிலேயே கொண்டாடி உள்ளனர் இதனைக்கண்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கேட்டபோது தங்களால் எதுவும் செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளனர் Conclusion:இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் செய்யப்பட வேண்டிய நிலையில் தனது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.