ETV Bharat / state

அரிசி ஆலையால் துர்நாற்றம்...நடவடிக்கை எடுக்கக் கோரும் மக்கள்!

author img

By

Published : May 22, 2021, 3:19 PM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலையால் மாசு ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் !
துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இயங்கிய சிறிய நெல் அரவை மில் தற்போது நவீன அரிசி ஆலையாக மாற்றப்பட்டது. இந்த நவீன அரிசி ஆலை அதிக அளவில் மரக்கட்டைகளை கொண்டு நெல் அவியல் போட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

இந்த அரிசி ஆலை மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு, கழிவு நீரை உரிய பாதுகாப்பில்லாமல், தெருக்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் நெல் உமி, கரித்துகள்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், குடிநீரிலும் கலந்து மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார்!

இதனால், பலருக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுவதால் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊர் மக்கள் அரசு அலுவலர்களிடம் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போது, கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில்கூட உரிய பாதுகாப்பின்றி 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு ஆலை இயங்கி வருகிறது.

எனவே, ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இயங்கிய சிறிய நெல் அரவை மில் தற்போது நவீன அரிசி ஆலையாக மாற்றப்பட்டது. இந்த நவீன அரிசி ஆலை அதிக அளவில் மரக்கட்டைகளை கொண்டு நெல் அவியல் போட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

இந்த அரிசி ஆலை மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு, கழிவு நீரை உரிய பாதுகாப்பில்லாமல், தெருக்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் நெல் உமி, கரித்துகள்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், குடிநீரிலும் கலந்து மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார்!

இதனால், பலருக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுவதால் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊர் மக்கள் அரசு அலுவலர்களிடம் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போது, கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில்கூட உரிய பாதுகாப்பின்றி 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு ஆலை இயங்கி வருகிறது.

எனவே, ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.