கள்ளக்குறிச்சி மாவட்ட போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 விழுக்காடு போனஸை இந்த ஆண்டு 10 விழுக்காடாக குறைத்து வழங்க உத்தரவிட்டப்பட்டது. இதை கண்டித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸை வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்