ETV Bharat / state

ஈரோட்டில் இளைஞர் அடித்துக்கொலை!

author img

By

Published : Oct 26, 2020, 6:52 PM IST

ஈரோடு: உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில், இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரயில்வே இருப்புப்பாதையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth killed in Erode
Youth killed in Erode

ஈரோடு அருகேயுள்ள மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வீரப்பன் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். திருமணமாகாத இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் வீரப்பன் தனது உறவினர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையிலிருந்த இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் தங்களது கைகளில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். அப்போது கையில் கிடைத்த பொருள்களை வைத்து வீரப்பனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இறந்துபோன வீரப்பனில் உடலை மோளக்கவுண்டன்பாளையம் ரயில்வே இருப்புப் பாதையில் போட்டுவிட்டு உறவினர்கள் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் வீரப்பனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் திருமணமாகாத இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரயில்வே இருப்புப்பாதை பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகேயுள்ள மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வீரப்பன் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். திருமணமாகாத இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் வீரப்பன் தனது உறவினர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையிலிருந்த இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் தங்களது கைகளில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். அப்போது கையில் கிடைத்த பொருள்களை வைத்து வீரப்பனை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இறந்துபோன வீரப்பனில் உடலை மோளக்கவுண்டன்பாளையம் ரயில்வே இருப்புப் பாதையில் போட்டுவிட்டு உறவினர்கள் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் வீரப்பனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் திருமணமாகாத இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரயில்வே இருப்புப்பாதை பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.