ETV Bharat / state

உலக பாம்புகள் தினம்: மக்களின் பயத்தால் கொல்லப்படும் பாம்பினங்களை காக்க வேண்டும்

author img

By

Published : Jul 17, 2020, 10:01 PM IST

ஈரோடு: மக்களின் பயத்தால் கொல்லப்படும் பாம்பினங்களை காக்கவும், விவசாயத்தில் பாம்புகள் வகிக்கும் பங்குகள் குறித்தும் உலக பாம்புகள் தினத்தில் நம்முடன் உரையாடுகிறார் கால்நடை மருத்துவர், பாம்பு அறுவை சிகிச்சை நிபுணர் கே.அசோகன்.

பாம்பினங்களை காக்க வேண்டும்
பாம்பினங்களை காக்க வேண்டும்

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் கே.அசோகன். அவர் இந்தியா அளவில் உள்ள ஒரே ஒரு பாம்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் பாம்பினங்களை பாதுகாப்பு குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பது குறித்து கண்போம்.

வரலாறு:

பாம்பினங்கள் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. பல்லிகளில் இருந்து தான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக பல ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளுக்கு அதிர்வலைகளை உணரும் சக்தி, நுகர்ந்து பார்க்கும் திறன் அதிகம்.

உலகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன. அவை அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிடப்பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சுமார் 600 இனங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. அதில் 200 பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லவோ அல்லது கணிசமாக காயப்படுத்தவோ கூடியவை. இந்தியாவைப் பொருத்துவரை 300க்கும் மேற்பட்டவை வகைப் பாம்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பாம்புகள்:

பண்டை காலத்தில் பாம்புகளை தெய்வமாக கருதினர். விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலக்கட்டங்களில் நெற்பயிரைச் சேதப்படுத்திகூடிய எலிகளை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் எலிகளை உண்ண வரும் பாம்புகள் அடித்துக்கொல்லாமல் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் தற்போது அப்படி அல்ல. பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. முன்பெல்லாம் சாலைகளில், வீட்டின் பின்பகுதிகள் என அடிக்கடி பாம்புகளை பார்த்திருப்போம். தற்போது அவை அரிதாகிவிட்டன. ஏனென்றால் நகர்மயமாக்கல், விவசாய நிலங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட நாகரீக வளர்ச்சியால் பாம்புகள் அழிவை சந்தித்துவருகின்றன.

அவற்றின் வாழ்விடம் காணாமல் போய்விட்டது. அதனால் பாம்புகள் சாக்கடைகள், வீடுகள், வீதிகளில் திரிகின்றன. அதனால் மக்கள் அவற்றை அடித்து கொல்கின்றனர். பொதுவாக பாம்புகள் யாரையும் துரத்தி கடிக்காது. அவை செல்லும் வழியில் மனிதர்கள் அவற்றை சீண்டினால் மட்டுமே அவை தற்காத்துக்கொள்ள முதலில் நகர்ந்துதான் செல்லும். அதனை மிதித்தால், அடித்தால் மட்டுமே வலியால் கடிக்கும்.

பாம்புகளில் விஷதன்மை கொண்டவை நான்கு வகையான பாம்புகள் மட்டுமே. அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், ராஜநாகன், கண்ணாடிவிரியன் உள்ளிட்டவை. மீதமுள்ள சாரை, பச்சை, தண்ணீர், கொம்பேரி நாகன் உள்ளிட்டவை விஷமில்லாத பாம்புகள். அந்த வகை பாம்புகளும் பயத்தாலும், அறியாமலும் கொல்லப்படுகின்றன.

மனிதர்களால் பாதி, இரையின்றி பாதி என கொத்துக்கொத்தாக பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவருகின்றன. பாம்புகள் 20 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆனால் தற்போதுள்ள நிலையில் 2 வயதுக்கு மேல் கூட பாம்புகள் தாக்குப்பிடிப்பதில்லை. மனிதர்களால் கொல்லப்படுகின்றன.

நன்மைகள்:

பாம்புகளுக்கு உணவு சங்கிலியாக இருக்ககூட்டியாக எலிகளை அவை வேட்டையாடுவதுன் மூலம் விவசாயத்தை பாதுகாக்க முடியும். எடுக்காட்டாக ஒரு உணவுக் குடோனில் ஆறு எலிகள் இருந்தால் நாம் உண்ணும் உணவை விட ஆறு மடங்கு உணவை நாசம் செய்யும். அவற்றைப் பாம்புகள் கட்டுபடுத்தி மனிதனுக்கு பெரும் பங்காற்றுகின்றன.

மேலும், பாம்பின் விஷத்திலிருந்து உயிரை காப்பாற்ற கூடிய பல அரியவகை மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதையெல்லாம் மறந்து விட்டு பாம்புகளை பார்த்தவுடன் அடித்து கொல்கிறோம்.

பாம்பினங்களை காக்க வேண்டும்

பாம்புகளை காக்க எடுத்த நடவடிக்கைகள்:

காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி காடுகளில் விட்டுவருகிறோம். இதுவரை 60 பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவை குணமடைந்து காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு பாம்பு 40 முட்டைகள் இடும். வீடுகளில் பாம்பு முட்டையிடுவதை கண்டுபிடித்து செயற்கை முறையில் பொறிக்க வைத்து பாம்புகள் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்தியாவிலேயே கேன்சர் நோயுள்ள பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளோம். பாம்புகளில் ரேடியாடிரான்மீட்டர் வைத்து அதன் வாழ்கை முறைகளை கண்காணித்து வருகிறோம்.

இந்த உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகளை நாம் பாதுகாக்க வேண்டும. பாம்புகளுக்கும் இந்த உலகம் சொந்தம். பயத்தால் அவற்றை அடித்துக்கொல்லாமல், அவற்றை போக விடுங்கள். வாழட்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவிலேயே பாம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் இவர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் பல தனியார் அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்துள்ளன.

இதையும் படிங்க: மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் கே.அசோகன். அவர் இந்தியா அளவில் உள்ள ஒரே ஒரு பாம்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் பாம்பினங்களை பாதுகாப்பு குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பது குறித்து கண்போம்.

வரலாறு:

பாம்பினங்கள் தோன்றி 13 கோடி ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. பல்லிகளில் இருந்து தான் பாம்புகள் பரிணாம வளர்ச்சி அடைந்ததாக பல ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளுக்கு அதிர்வலைகளை உணரும் சக்தி, நுகர்ந்து பார்க்கும் திறன் அதிகம்.

உலகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன. அவை அண்டார்டிகா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, கிரீன்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிடப்பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சுமார் 600 இனங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. அதில் 200 பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லவோ அல்லது கணிசமாக காயப்படுத்தவோ கூடியவை. இந்தியாவைப் பொருத்துவரை 300க்கும் மேற்பட்டவை வகைப் பாம்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பாம்புகள்:

பண்டை காலத்தில் பாம்புகளை தெய்வமாக கருதினர். விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த காலக்கட்டங்களில் நெற்பயிரைச் சேதப்படுத்திகூடிய எலிகளை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் எலிகளை உண்ண வரும் பாம்புகள் அடித்துக்கொல்லாமல் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் தற்போது அப்படி அல்ல. பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. முன்பெல்லாம் சாலைகளில், வீட்டின் பின்பகுதிகள் என அடிக்கடி பாம்புகளை பார்த்திருப்போம். தற்போது அவை அரிதாகிவிட்டன. ஏனென்றால் நகர்மயமாக்கல், விவசாய நிலங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட நாகரீக வளர்ச்சியால் பாம்புகள் அழிவை சந்தித்துவருகின்றன.

அவற்றின் வாழ்விடம் காணாமல் போய்விட்டது. அதனால் பாம்புகள் சாக்கடைகள், வீடுகள், வீதிகளில் திரிகின்றன. அதனால் மக்கள் அவற்றை அடித்து கொல்கின்றனர். பொதுவாக பாம்புகள் யாரையும் துரத்தி கடிக்காது. அவை செல்லும் வழியில் மனிதர்கள் அவற்றை சீண்டினால் மட்டுமே அவை தற்காத்துக்கொள்ள முதலில் நகர்ந்துதான் செல்லும். அதனை மிதித்தால், அடித்தால் மட்டுமே வலியால் கடிக்கும்.

பாம்புகளில் விஷதன்மை கொண்டவை நான்கு வகையான பாம்புகள் மட்டுமே. அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், ராஜநாகன், கண்ணாடிவிரியன் உள்ளிட்டவை. மீதமுள்ள சாரை, பச்சை, தண்ணீர், கொம்பேரி நாகன் உள்ளிட்டவை விஷமில்லாத பாம்புகள். அந்த வகை பாம்புகளும் பயத்தாலும், அறியாமலும் கொல்லப்படுகின்றன.

மனிதர்களால் பாதி, இரையின்றி பாதி என கொத்துக்கொத்தாக பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவருகின்றன. பாம்புகள் 20 முதல் 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆனால் தற்போதுள்ள நிலையில் 2 வயதுக்கு மேல் கூட பாம்புகள் தாக்குப்பிடிப்பதில்லை. மனிதர்களால் கொல்லப்படுகின்றன.

நன்மைகள்:

பாம்புகளுக்கு உணவு சங்கிலியாக இருக்ககூட்டியாக எலிகளை அவை வேட்டையாடுவதுன் மூலம் விவசாயத்தை பாதுகாக்க முடியும். எடுக்காட்டாக ஒரு உணவுக் குடோனில் ஆறு எலிகள் இருந்தால் நாம் உண்ணும் உணவை விட ஆறு மடங்கு உணவை நாசம் செய்யும். அவற்றைப் பாம்புகள் கட்டுபடுத்தி மனிதனுக்கு பெரும் பங்காற்றுகின்றன.

மேலும், பாம்பின் விஷத்திலிருந்து உயிரை காப்பாற்ற கூடிய பல அரியவகை மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதையெல்லாம் மறந்து விட்டு பாம்புகளை பார்த்தவுடன் அடித்து கொல்கிறோம்.

பாம்பினங்களை காக்க வேண்டும்

பாம்புகளை காக்க எடுத்த நடவடிக்கைகள்:

காயமடைந்த பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி காடுகளில் விட்டுவருகிறோம். இதுவரை 60 பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவை குணமடைந்து காட்டில் விடுவிக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு பாம்பு 40 முட்டைகள் இடும். வீடுகளில் பாம்பு முட்டையிடுவதை கண்டுபிடித்து செயற்கை முறையில் பொறிக்க வைத்து பாம்புகள் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்தியாவிலேயே கேன்சர் நோயுள்ள பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளோம். பாம்புகளில் ரேடியாடிரான்மீட்டர் வைத்து அதன் வாழ்கை முறைகளை கண்காணித்து வருகிறோம்.

இந்த உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகளை நாம் பாதுகாக்க வேண்டும. பாம்புகளுக்கும் இந்த உலகம் சொந்தம். பயத்தால் அவற்றை அடித்துக்கொல்லாமல், அவற்றை போக விடுங்கள். வாழட்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவிலேயே பாம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் இவர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் பல தனியார் அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்துள்ளன.

இதையும் படிங்க: மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.