ETV Bharat / state

மாட்டு வண்டியில் இறுதிகட்டப் பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர்!

author img

By

Published : Dec 26, 2019, 10:35 AM IST

ஈரோடு: ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில், மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்று இறுதிகட்டப் பரப்புரை மேற்கொண்டார்.

cows cart Election propaganda campaign in Erode
cows cart Election propaganda campaign in Erode

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக ஊராட்சிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பரப்புரை முடிவடைந்தது. முன்னதாக, இறுதிகட்டப் பரப்புரையில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டினர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடுமாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் பத்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பொது வேட்பாளராகப் போட்டியிடும் முதுகலை பட்டதாரி பிரகாஷ் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க அவரது ஆதவாளர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக, வேட்பாளரை அழைத்துக்கொண்டு சென்றனர். குறிப்பாக, பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், அண்ணாநகர், வரப்பள்ளம், அடசப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்குச் சென்றனர்.

செல்லும் இடங்களில் எல்லாம் மாட்டுவண்டியில் வேட்பாளர் வருவதைப் பார்த்து வியந்து போய், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷின் சின்னமான மூக்குக்கண்ணாடியை பரப்புரைக்குச் செல்லும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாட்டு வண்டியில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர்

மோட்டார் வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற வேட்பாளர்கள், இவரது மாட்டுவண்டிப் பயணத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், ' வாக்காளர்களுக்கு வித்தியாசமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் மாட்டுவண்டி பரப்புரை மேற்கொண்டேன்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'பொய் பரப்பரை செய்யும் திமுக'- அதிமுக குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக ஊராட்சிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பரப்புரை முடிவடைந்தது. முன்னதாக, இறுதிகட்டப் பரப்புரையில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டினர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடுமாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் பத்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பொது வேட்பாளராகப் போட்டியிடும் முதுகலை பட்டதாரி பிரகாஷ் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க அவரது ஆதவாளர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக, வேட்பாளரை அழைத்துக்கொண்டு சென்றனர். குறிப்பாக, பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம், அண்ணாநகர், வரப்பள்ளம், அடசப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்குச் சென்றனர்.

செல்லும் இடங்களில் எல்லாம் மாட்டுவண்டியில் வேட்பாளர் வருவதைப் பார்த்து வியந்து போய், வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷின் சின்னமான மூக்குக்கண்ணாடியை பரப்புரைக்குச் செல்லும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாட்டு வண்டியில் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர்

மோட்டார் வாகனங்களில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மற்ற வேட்பாளர்கள், இவரது மாட்டுவண்டிப் பயணத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், ' வாக்காளர்களுக்கு வித்தியாசமாகவும், தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் மாட்டுவண்டி பரப்புரை மேற்கொண்டேன்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'பொய் பரப்பரை செய்யும் திமுக'- அதிமுக குற்றச்சாட்டு

Intro:Body:tn_erd_05_sathy_mattu_vandi_vis_tn10009

தமிழக ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல் 27ந்தேதி நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். பெருமுகை ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களை கவர்ந்தும் தனது சின்னமான மூக்குக்கண்ணாடியை குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்..

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக ஊராட்சிகளில் இன்று மாலை 5 மணியுடுன் பிர்சாரம் முடிவடையும் நிலையில் தற்போது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அரசியல் கட்சியின் தீவிரம் காட்டிவருகின்றனர். அதில் மக்களையும் வாக்காளர்களையும் கவர்ந்திழுக்க ஒவ்வொரு வேட்பாளர்களும் ஒவ்வொரு விதங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருமுகை ஊராட்சியில் தலைவர் பதவிக்கு பத்து பேர் போட்;டியிடும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர்திழுக்க பல்வேறு முறைகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொதுமக்களாக நிறுத்தப்பட்டுள்ள முதுகலை பட்டதாரியான பிரகாஷ் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க அவரது ஆதவாளர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வேட்பாளரை அழைத்துக்கொண்டு பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட வளையபாளையம் அண்ணாநகர் வரப்பள்ளம் அடசப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் மாட்டுவண்டியில் வேட்பாளர் வருதை பார்த்து வியந்து போய் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர் பிரகாஷின் சின்னமான மூக்குக்கண்ணாடியை பிரச்சாரம் செல்லும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களும் வேட்பாளர் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மோட்டார் வாகனங்களில் சென்று வாக்கு சேகரில் ஈடுபட்டுள்ள மற்ற வேட்பாளர்கள் இவரது மாட்டுவண்டி பயணத்தை பார்த்து வியப்பில் ஆழ்ந்து போயியுள்ளனர். மாவட்டு வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள வேட்பாளர் பிரகபஷ் கூறும் போது வாக்காளர்களுக்கு வித்தியாசமாகவும் பாரம்பரியத்தை நினைவு கூறும் விதமாகவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் மாட்டுவண்டி பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.