ETV Bharat / state

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

ஈரோடு: அரையாண்டு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

author img

By

Published : Dec 27, 2019, 11:02 AM IST

Strict action will be taken if special classes are held for half yearly exam leave
Strict action will be taken if special classes are held for half yearly exam leave

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”இன்று நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தததால் வாக்காளிக்கும் வாய்ப்பை இழந்திருந்தேன். தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளதால், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குப் பின் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. விவசாயத்திற்கும் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுகவிற்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன்.

தனியார் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்றே வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”இன்று நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தததால் வாக்காளிக்கும் வாய்ப்பை இழந்திருந்தேன். தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளதால், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக நமது மாநிலம் திகழ்கிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குப் பின் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. விவசாயத்திற்கும் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை அதிமுகவிற்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன்.

தனியார் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்றே வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

Intro:Body:tn_erd_01_sathy_education_minister_vis_tn10009

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்ககளில் தனியார் பள்ளிகள் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்கப்படும் என்றும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளைம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று நடைபெறுகிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்சியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது வாக்காளிக்கும் வாய்ப்பை இழந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு வாக்களித்தது மகிழ்சியாக உள்ளது. தற்போது உள்ளாட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் அதிகளவு நிறைவேற்றப்பட்டுள்ளது.ஓர் ஆட்சி இருக்கிறபோது உள்ளாட்சிகளில் சிறப்பாக பணியாற்ற முடியும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஓர் ஆண்டிற்கு பிறகு 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் தமிழகத்தில் மின் வெட்டே இல்லாத மாநிலமாக திகழ்கிறது. விவசாயத்திற்கும் முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்சியாக உள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன். அரையாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் விடுமுறை தினங்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகக்கு சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் ஜனவரி 3ஆம் தேதி பள்ளி திறக்கும் நாளிலேயே வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.