ETV Bharat / state

காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்ட பெண் - காவல்துறை நடவடிக்கை என்ன?

வடமாநில இளைஞரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு கொல்கத்தா சென்ற இளம்பெண் தனது கணவர் துன்புறுத்துவதாக வீடியோ வெளியிட்ட நிலையில், மேற்கு வங்கம் சென்ற தமிழ்நாடு போலீசார் அப்பெண்ணை குழந்தையுடன் மீட்டு வந்தனர்.

author img

By

Published : Nov 25, 2022, 7:13 PM IST

என்னை காப்பாற்றுங்கள் இளம்பெண் கதறல்: மீட்ட காவல்துறை
என்னை காப்பாற்றுங்கள் இளம்பெண் கதறல்: மீட்ட காவல்துறை

ஈரோடு: பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சுபத்ரா. நான்கு ஆண்டுகளுக்கு முன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த சுப்ரதாஸ் என்பவரை காதலித்துள்ளார்.

பின்னர் பெற்றொருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தா சென்றுள்ளார். இந்நிலையில் சுபத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சுப்ரதாஸ் வீட்டில் தன்னை அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை, சுபத்ரா பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபத்ராவின் பெற்றோர் மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதன் பேரில், கொல்கத்தா சென்ற பெருந்துறை போலீசார், மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் சுப்ரதாஸ் வீட்டிற்கு சென்று சுபத்ராவையும் அவரது இரண்டு வயது மகனையும் மீட்டனர். பின்னர் அவர்களை ரயில் மூலம் இன்று (நவ.25) காலை பெருந்துறை அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க: "தற்கொலை செய்து கொள் இன்சூரன்ஸ் தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன்" - மனைவியை மிரட்டிய கணவர்

ஈரோடு: பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் சுபத்ரா. நான்கு ஆண்டுகளுக்கு முன் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த சுப்ரதாஸ் என்பவரை காதலித்துள்ளார்.

பின்னர் பெற்றொருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தா சென்றுள்ளார். இந்நிலையில் சுபத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், சுப்ரதாஸ் வீட்டில் தன்னை அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை, சுபத்ரா பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபத்ராவின் பெற்றோர் மகளை மீட்டுத்தருமாறு பெருந்துறை போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதன் பேரில், கொல்கத்தா சென்ற பெருந்துறை போலீசார், மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் சுப்ரதாஸ் வீட்டிற்கு சென்று சுபத்ராவையும் அவரது இரண்டு வயது மகனையும் மீட்டனர். பின்னர் அவர்களை ரயில் மூலம் இன்று (நவ.25) காலை பெருந்துறை அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க: "தற்கொலை செய்து கொள் இன்சூரன்ஸ் தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன்" - மனைவியை மிரட்டிய கணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.