ETV Bharat / state

ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து - Ministers congratulate Navamani Kandasamy

ஈரோடு: மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த நவமணி கந்தசாமிக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Ministers
Ministers
author img

By

Published : Jan 13, 2020, 7:32 AM IST

ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்வுசெய்யும் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் கலந்துகொள்ளும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தவிர யாரும் தேர்தல் நடைபெற்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த மறைமுகத் தேர்தலில் ஆறாம் வார்டு அதிமுக உறுப்பினர் நவமணி கந்தசாமி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட நவமணி கந்தசாமிக்கு அரசியல் கட்சியினர், அவரது உறவினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நவமணி கந்தசாமிக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் செல்வாக்கை நிலைநிறுத்திய அதிமுக

ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி 14 இடங்களிலும், திமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்வுசெய்யும் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் கலந்துகொள்ளும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தவிர யாரும் தேர்தல் நடைபெற்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த மறைமுகத் தேர்தலில் ஆறாம் வார்டு அதிமுக உறுப்பினர் நவமணி கந்தசாமி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட நவமணி கந்தசாமிக்கு அரசியல் கட்சியினர், அவரது உறவினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நவமணி கந்தசாமிக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் செல்வாக்கை நிலைநிறுத்திய அதிமுக

Intro:ஈரோடு. ஆனந்த்
ஜன11

மாவட்ட ஊராட்சி தலைவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து!

ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த நவமணி கந்தசாமிக்கு தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் 14 வேட்பாளர்களும், திமுக கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாமல் ரகசியமான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தலில் கலந்து கொள்ளும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தவிர யாரும் தேர்தல் நடைபெற்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 11 மணிக்குத் தொடங்கிய மறைமுகத் தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களித்திடும் வாக்குச்சீட்டுக்களுக்காக தனி வாக்குப்பெட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 6ம் வார்டு அதிமுக உறுப்பினர் நவமணி கந்தசாமி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நவமணி கந்தசாமிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Body:இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நவமணி கந்தசாமி தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

Conclusion:மேலும் மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவமணி கந்தசாமிக்கு பூங்கொத்தை வழங்கிய அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றிட தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.