ETV Bharat / state

திமுக வென்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

author img

By

Published : Jan 24, 2020, 10:29 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட விழாவில் பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன், திமுக வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தும்படியாக அமைந்துள்ளது.

Minister karupannan, அமைச்சர் கே.சி. கருப்பணன்
Minister karupannan, அமைச்சர் கே.சி. கருப்பணன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

ஏனெனில் ஆட்சியில் இருப்பது அதிமுகதான். எங்கள் அரசுதான் அனைவருக்கும் நிதி ஒதுக்க வேண்டும். சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குக் குறைந்த நிதியே ஒதுக்கப்படும்’ என்றார். மேலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரால் என்ன செய்துவிட முடியும் எனவும், திமுக வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

விழாவில் பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சார்பில் யார் நிற்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது அங்கு இரட்டை இலை சின்னத்ததைதான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவினர் கோடி கோடியாக சொத்து சேர்த்துள்ளனர். அதேவேளையில் அதிமுக அரசு மக்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், நடிகர் ரஜினி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரஜினி யாரையும் திட்டாத பண்பாளர் - ராகவா லாரன்ஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தாலும் அவர்களால் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

ஏனெனில் ஆட்சியில் இருப்பது அதிமுகதான். எங்கள் அரசுதான் அனைவருக்கும் நிதி ஒதுக்க வேண்டும். சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குக் குறைந்த நிதியே ஒதுக்கப்படும்’ என்றார். மேலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரால் என்ன செய்துவிட முடியும் எனவும், திமுக வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

விழாவில் பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன்

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சார்பில் யார் நிற்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது அங்கு இரட்டை இலை சின்னத்ததைதான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவினர் கோடி கோடியாக சொத்து சேர்த்துள்ளனர். அதேவேளையில் அதிமுக அரசு மக்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், நடிகர் ரஜினி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரஜினி யாரையும் திட்டாத பண்பாளர் - ராகவா லாரன்ஸ்

Intro:Body:tn_erd_06_sathy_minister_karuppanan_vis_tn10009

யூனியன் சேர்மன் தேர்தலில் திமுக ஜெயித்து என்ன செய்ய முடியும்: குறந்த நிதி ஒதுக்குவோம் அமைச்சர் கருப்பணன் பேச்சால் சர்ச்சை

யூனியன் சேர்மன் தேர்தலில் திமுக ஜெயித்து என்ன செய்ய முடியும்: திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே வழங்குவோம்: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த தினப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பேச்சு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிற்ந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடப்பட்டது. திமுக சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பிடித்தாலும் அவர்களால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. அதிமுக ஆட்சியில் திமுகவினர் என்ன செய்ய முடியும். திமுக சேர்மனமாக உள்ள சத்தியமங்கலம் ஒன்றியத்தில் குறைந்த நிதியே ஒதுக்கப்படும். அதிமுக சார்பில் யார் நிற்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது அங்கு இரட்டை இலை சின்னத்தை தான் பார்க்க வேண்டும். திமுகவினர் கோடி கோடியாக சொத்து சேர்துள்ளனர். அதிமுக அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தான் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. வீதி வீதிக்கு பைப் போடப்பட்டது. திமுக வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.
பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்னும் முழுமையான ஒழிப்பு இல்லை. அண்டைமாநிலமான கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் இருந்த காரணத்தால் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மீண்டும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் பணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக்கு இரண்டு சேர்மன் பதவி கிடைத்தது. இதற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும். சில இடங்களில் தோல்வியடைந்தது குறித்து வருத்தப்படவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வெற்றி பெறுவோம். நடிகர் ரஜினி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று பேசினார்.

படக்காட்சிகள்: 3
1). அமைச்சர் கூட்டத்தில் பேசியது
2). எம்ஜிஆர் பிறந்த தினப்பொதுக்கூட்டம்
3).அமைச்சர் பேட்டி
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.