ETV Bharat / state

அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் - பெற்றோர் புகார் - பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மாணவர்களின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ird collage issue
ird collage issue
author img

By

Published : Feb 4, 2020, 7:38 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென மருத்துவமனை, போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் படிக்கும் விதமாக போக்குவரத்து மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

மொத்தம் 150 இடங்கள் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தொடர் இழப்பால் பெருந்துறை போக்குவரத்து மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் மாற்றி 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமின்றி பல்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை எழுதி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணமாக 13 ஆயிரத்து 600 ரூபாய் பெற்று வரும் நிலையில், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றியும் தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கப்படும் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்யை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியிலும் வசூலித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் புகார்

இந்நிலையில், மாணவ - மாணவியர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி மனு அளித்தனர். மேலும், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதால், ஏழை குழந்தைகள் அதிக கட்டணம் கட்ட முடியாமல் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென மருத்துவமனை, போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் படிக்கும் விதமாக போக்குவரத்து மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

மொத்தம் 150 இடங்கள் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தொடர் இழப்பால் பெருந்துறை போக்குவரத்து மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் மாற்றி 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமின்றி பல்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை எழுதி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணமாக 13 ஆயிரத்து 600 ரூபாய் பெற்று வரும் நிலையில், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றியும் தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கப்படும் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்யை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியிலும் வசூலித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் புகார்

இந்நிலையில், மாணவ - மாணவியர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி மனு அளித்தனர். மேலும், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதால், ஏழை குழந்தைகள் அதிக கட்டணம் கட்ட முடியாமல் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!

Intro:ஈரோடு ஆனந்த்
பிப்.03

பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார்!

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தனியார் கல்லூரிபோல் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு என்று மருத்துவமனை மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் படிக்கும் விதமாக போக்குவரத்து மருத்துவமனையில் மருத்துவ கல்லூரியும் தொடங்கபட்டது.

மொத்தமாக 150-இடங்கள் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தொடர் இழப்பின் காரணமாக பெருந்துறை போக்குவரத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் மாற்றி கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்போது போக்குவரத்து ஊழியர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி பல்வேறு குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வினை எழுதி மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணமாக 13,600 ரூபாயை பெற்று வரும் நிலையில் பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரியை அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றியும் தனியார் மருத்துவ கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கபடும் 3 லட்சத்து 85-ஆயிரம் ரூபாய் கட்டணத்தை போக்குவரத்து மருத்துவ கல்லூரியிலும் வசூலித்து வருவதாகவும் Body:அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கபடும் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தையே பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரியில் வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி மனு அளித்துள்ளனர்.

Conclusion:பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கபட்டதை தொடர்ந்து சாதாரன ஏழை குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் பயின்று வருவதால் அதிக கட்டணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்தள்ளனர்..

பேட்டி : நாகராஜன்,

சுமதி.. மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.