ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு!

author img

By

Published : Jan 9, 2020, 10:33 AM IST

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

Bhawanisagar dam
பவானிசாகர் அணை

ஈரோட்டில் மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அக்டோபர் 11ஆம் தேதி முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், ஜனவரி மாதத்திலும் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள்,கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இதனை ஏற்று இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் உள்ள கால்வாய் மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: மதிப்பெண் குறைந்ததால் பறிபோன மாணவியின் உயிர்!

ஈரோட்டில் மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அக்டோபர் 11ஆம் தேதி முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், ஜனவரி மாதத்திலும் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள்,கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இதனை ஏற்று இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் உள்ள கால்வாய் மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: மதிப்பெண் குறைந்ததால் பறிபோன மாணவியின் உயிர்!

Intro:Body:tn_erd_01_sathy_water_release_vis_tn10009.mp4

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.


ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக உள்ளது. அணை மூலம் கீழ்பவானி வாய்கால் 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்களும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அக் 11ம் தேதி முழுகொள்ளவான 105 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் 3 மாதங்களாக  அணையின் நீர்மட்டம் 105 அடியுடன்   நீடிக்கிறது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஆக.16ம் தேதி முதல் டிச.26ம் தேதி வரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்திலும் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள்,கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு இன்று(09.01.2020) பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் உள்ள கால்வாய் மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பட்டனை அழுத்தி திறந்து வைத்தார். அணையில் இருந்து சீறிபாய்ந்து வந்த வெண்நிறநுரையுடன் கூடிய தண்ணீரில் விவசாயிகள், அதிகாரிகள் மலர்கள் தூவி வரவேற்றனர். முதலில் வாய்ககாலில் 500 கனஅடி நீரும் தொடர்ந்து படிப்படியாக 1000,1800 மற்றும் 2300 கனஅடி நீராக உயர்த்தப்படும். இந்த தண்ணீர் திறப்பு காலிங்ராயன் வாய்க்காலில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் விளைநிலங்களுக்கு இன்று 09.01.2020 முதல்  08.05.2020 வரையில் 5.18 டிஎம்சி தண்ணீரும் கீழ்பவானி வாய்காலில் 1 லட்சத்து 3500 ஏக்கள் விளைநிலங்களுக்கு இன்று முதல் 30.04.2020 வரையிலும் 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக ப யன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.