ETV Bharat / state

இடிந்துவிழும் நிலையில் வீடுகள்! அச்சத்தில் வாழும் மக்கள்!! - இடிந்து விழும் நிலையில் வீடுகள், புதிய வீடு கட்டித் தர சத்தியமங்கலம் கிராம மக்கள் கோரிக்கை

ஈரோடு: புதுவடவள்ளியில் உள்ள தொகுப்புவீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

new house
author img

By

Published : Nov 7, 2019, 12:49 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி பகுதியில் அட்டமொக்கை காலனி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாய கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 42 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இந்த வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், கான்கிரீட் கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் ஒவ்வொரு வீடும் எலும்புக்கூடுகள்போல் காட்சியளிக்கிறது.

மழைக்காலங்களில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகுவதால் குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் வீடுகளால் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய வீடுகள் கட்டித்தரக் கோரிக்கை

இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். பழுதடைந்துள்ள வீடுகள் இடிந்துவிழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டமொக்கை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 'பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சீரமைத்துத் தரப்படும்'- பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி பகுதியில் அட்டமொக்கை காலனி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாய கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 42 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இந்த வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், கான்கிரீட் கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் ஒவ்வொரு வீடும் எலும்புக்கூடுகள்போல் காட்சியளிக்கிறது.

மழைக்காலங்களில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகுவதால் குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் வீடுகளால் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய வீடுகள் கட்டித்தரக் கோரிக்கை

இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். பழுதடைந்துள்ள வீடுகள் இடிந்துவிழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டமொக்கை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 'பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சீரமைத்துத் தரப்படும்'- பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்!

Intro:Body:tn_erd_01_sathy_group_house_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள்:
அச்சத்துடன் உயிர் வாழும் கிராம மக்கள்.


சத்தியங்கலம் அடுத்த புதுவடவள்ளியில் எப்போது வேண்டுமாலும் இடிந்து விழும் நிலையில் தொகுப்புவீடுகள் உள்ளதாகவும் அதனை மாற்றித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி பகுதியில் அட்டமொக்கை காலனி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடுங்பங்கள் வசித்து வருகின்றன. ஏழை விவசாய கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 42 குடும்பங்களுக்கு 42 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. இந்த வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கான்கிரீட் கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஒவ்வொரு வீட்டின் உட்புறத்திலும் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிவதால் எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் மேற்கூரை ஒழுகுவதால் வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பழுதடைந்துள்ள வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டமொக்கை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.