ETV Bharat / state

மதுபோதையில் தகராறு -  கல்லால் அடித்து கூலித்தொழிலாளி கொலை

author img

By

Published : Oct 12, 2020, 3:47 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

விவசாயி கல்லால் அடித்துக் கொலை
விவசாயி கல்லால் அடித்துக் கொலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ஒரு நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பவானிசாகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (55) என்பது தெரியவந்தது. இவர் தனது மனைவியின் தங்கை கணவரான காராச்சிக்கொரைமேடு பகுதியைச் சேர்ந்த மாரி (45) என்பவருடன் சேர்ந்து நேற்று (அக்.11) இரவு கொத்தமங்கலத்தில் உள்ள மாரியின் குடிசை வீட்டிற்குச் சென்று இருவரும் மது அருந்தினர். பின் போதை தலைக்கு ஏறியதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, முருகனை செங்கலால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் மாரியை பவானிசாகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின் முருகனின் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: தென்காசியில் தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ஒரு நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பவானிசாகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (55) என்பது தெரியவந்தது. இவர் தனது மனைவியின் தங்கை கணவரான காராச்சிக்கொரைமேடு பகுதியைச் சேர்ந்த மாரி (45) என்பவருடன் சேர்ந்து நேற்று (அக்.11) இரவு கொத்தமங்கலத்தில் உள்ள மாரியின் குடிசை வீட்டிற்குச் சென்று இருவரும் மது அருந்தினர். பின் போதை தலைக்கு ஏறியதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, முருகனை செங்கலால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் மாரியை பவானிசாகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின் முருகனின் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: தென்காசியில் தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.