ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் வேகவைக்கபட்டு, நன்கு வெயிலில் உலர்த்தி, அரவைக்கு தயாரான பதத்தில் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், நேற்றைய (ஏப்ரல் 20) நிலவரப்படி
விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 419-க்கும் அதிகபட்சமாக ரூ. 8ஆயிரத்து 589 வரை ஏலம் விடப்பட்டது. கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 559க்கும் அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரத்து 315 வரை ஏலம் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று(ஏப்ரல் 21) 2ஆவது நாளாக,
விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 311க்கும் அதிகபட்சமாக ரூ. 8ஆயிரத்து 455 வரையும் ஏலம் விடப்பட்டது. அதேபோல் கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 469க்கும் அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரத்து 109 வரையும் ஏலம் எடுக்கப்பட்டது.
நேற்றைய ஏல விற்பனை மற்றும் இன்றைய ஏல விற்பனையில் பெரியளவில் விலையேற்றம் இல்லை. வரும்நாட்களில் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!