ETV Bharat / state

குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் புகுந்ததால், துப்புரவு வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

ஈரோடு: மாநகராட்சிக்கு உட்பட்ட மோசிகீரனார் வீதி பகுதி குடியிருப்பில் கழிவுநீர் புகுந்ததால், கோபமடைந்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Apr 23, 2019, 2:44 PM IST

குடியிருப்பில் கழிவுநீர் புகுந்ததால், துப்புரவு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

ஈரோடு மாவட்டம் 56ஆவது வார்டில் மோசிகீரனார் வீதி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு தொடங்கப்படாமல் உள்ளது.

மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொள்வதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், அதிகாரிகள் எவ்வித நடடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர், குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் 56ஆவது வார்டில் மோசிகீரனார் வீதி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு தொடங்கப்படாமல் உள்ளது.

மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொள்வதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், அதிகாரிகள் எவ்வித நடடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர், குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஈரோடு 23.04.2019 
சதாசிவம்

ஈரோட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாததால் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் சூழ்ந்தது...இதனால் மாநகராட்சியின் துப்புரவு வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்....                                           
                                                 
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 56வது வார்டு பகுதியில் உள்ளது மோசிக்கீரனார் வீதி..இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்...இந்நிலையில் மாநகராட்சியின் சார்பில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மோசிக்கீரனார் வீதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது...ஆனால் இந்த கழிவு நீர் மையம் செயல்பட துவங்கவில்லை..இதனால் மழை காலங்களில் கழிவு நீர் முழுவதும் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது..இது குறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...இந்நிலையில் ஈரோட்டில் கடந்த இரு தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்ந்து வருகிறது.இதனால் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கழிவுகள் வெளியேறி மோசிக்கீரனார் வீதி முழுவதும் சாலையின் வழியாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது..இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்...இதனிடையே இன்று அவ்வழியாக வந்த மாநகராட்சிக்கு சொந்தமான துப்புரவு வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்..இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவா்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்..இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்ட்னர்... 
 
Visual send mojo
File name:TN_ERD_04_23_PUBLIC_PROTEST_VISUAL_7204339

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.