கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 144 தடை உத்தரவை மதிக்காமல் இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இவர்களுக்கு கரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். பின்னர் அவர்களை தோப்புக்கரணம் போடவைத்தனர்.
இதையும் படிங்க: 'ஊரடங்குல வீட்டுல குளிக்க மாட்டோம் ஆத்துலதான் குளிப்போம்' - இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் துறை!