ETV Bharat / state

சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

author img

By

Published : Sep 23, 2019, 12:26 PM IST

ஈரோடு: நூலுக்கான விலையை நாளொன்றுக்கு இரண்டு முறை  நிர்ணயம் செய்வதை தவிர்த்து மாதமொன்றுக்கு ஒரே விலை என்பதை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

sithod

ஈரோடு மாவட்டம் விசைத்தறி தொழிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நாளுக்குநாள் நூல் விலையின் மாற்றம் காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் நஷ்டமடைந்துவருகின்றனர்.

இதனால், ஈரோடு மாவட்ட சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சித்தோட்டில் உள்ள ஐந்தாயிரம் விசைத்தறி தொழிற்சாலைகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்திவைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நூல் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது. இதன் காரணமாக, எங்களின் துணி ரகங்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சரிந்துவரும் நூல் விலையை காரணம்காட்டி குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துவருகின்றனர். இதனால் நாங்கள் உற்பத்தி செய்யும் துணி வகைகளை நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.

சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

எனவே, நூல் விலையை மாதமொன்றுக்கு ஒரே விலையென நிர்ணயிக்க தமிழ்நாடு துணிநூல் துறைக்கு கோரிக்கை விடுத்து இப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'வேலைக்கு தகுந்த கூலி இல்லை' - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டம் விசைத்தறி தொழிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நாளுக்குநாள் நூல் விலையின் மாற்றம் காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் நஷ்டமடைந்துவருகின்றனர்.

இதனால், ஈரோடு மாவட்ட சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சித்தோட்டில் உள்ள ஐந்தாயிரம் விசைத்தறி தொழிற்சாலைகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்திவைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நூல் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது. இதன் காரணமாக, எங்களின் துணி ரகங்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சரிந்துவரும் நூல் விலையை காரணம்காட்டி குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துவருகின்றனர். இதனால் நாங்கள் உற்பத்தி செய்யும் துணி வகைகளை நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.

சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

எனவே, நூல் விலையை மாதமொன்றுக்கு ஒரே விலையென நிர்ணயிக்க தமிழ்நாடு துணிநூல் துறைக்கு கோரிக்கை விடுத்து இப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'வேலைக்கு தகுந்த கூலி இல்லை' - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.22

விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

நூலுக்கு சீரான விலையை அறிவித்திட வலியுறுத்தியும், நூலுக்கு நாளொன்றுக்கு இரண்டு விலையென்பதை மாற்றி மாதமொன்றுக்கு ஒரே விலை என்பதை நிர்ணயம் செய்திட வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம் சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

Body:ஈரோடு மாவட்டம் விசைத்தறித் தொழிலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை ஜவுளி ரகங்களுக்கும் இந்தியா முழுவதும் அதிக தேவையிருப்பதால் வியாபாரிகள் ஜவுளி ரகங்களை ஆர்வமுடன் கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாறுமாறான நூல் விலையின் காரணமாக நாளுக்கு நாள் விசைத்தறித் தொழில் நசிவடைந்து வருவதாகக் கூறி ஈரோடு மாவட்டம் சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கால்வரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சித்தோட்டில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறி நிறுவனங்களிலுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டிய சூழலில் நூல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாங்கும் போது ஒரு விலை விற்கும் போது ஒரு விலை என விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதன் காரணமாக தாங்கள் உற்பத்தி செய்யும் துணி வகைகளை கடும் வருவாய் இழப்பில் விற்பனை செய்து வருவதாகவும், கொள்முதல் செய்யும் ஜவுளி வியாபாரிகளும் சரிந்து வரும் நூல் விலையை காரணம் காட்டி உற்பத்தி செய்யும் துணிகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருவதால் தொடர்ந்து கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் டீசல், தங்கம் போல நூலுக்கும் தினசரி இரண்டு விலை இருப்பதால் நூலைக் கொள்முதல் செய்து அதனை துணியாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்குள் நூல் விலை பல மாற்றங்களுக்கு உட்படுவதால் நூல் விலையை மாதமொன்றுக்கு ஒரே விலை என நிர்ணயத்தால் வருவாய் இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

Conclusion:மேலும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தங்களைச் சார்ந்துள்ள நூல் விற்பனை கடைகள், சாய ஆலைகள், சலவை ஆலைகள், துணி வியாபாரிகள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்பதால் தமிழக அரசு விசைத்தறித் தொழிலை காப்பாற்றுவதற்கு நூலுக்கு சீரான விலையை நிர்ணயத்து வழங்கிட வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.