ETV Bharat / state

3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை

author img

By

Published : Oct 15, 2019, 9:09 AM IST

ஈரோடு: தாயை இழந்து தனியாகத் தவிக்கும் யானையை மீண்டும் காட்டில் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாக மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

elephant

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெண் கன்றுயானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் கன்றுயானையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

இந்நிலையில், கன்றுயானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால், அது வனப்பகுதியைவிட்டு வெளியேறி வனச்சாலையில் சுற்றித்திரிந்தது. இந்த யானையை வனத்துறையினர் திரும்ப மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் கன்றுயானையை பரிசோதித்து தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.

பெண் கன்றுயாணை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தநிலையில், திடீரென கன்றுயானையை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டுசென்றுவிட்டனர். மேலும், இந்த நடவடிக்கையை இவர்கள் ரகசியமாக மேற்கொண்டதால், வன உயிரின ஆர்வலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை

இதையடுத்து, கன்றுயானையின் நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். கன்றை யானைக்கூட்டத்துடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை ரகசியமாக இருப்பது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், கன்று யானை குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அலுவலகத்தில் மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்று யானையின் நிலை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனப்பாதுகாவலர் நாகநாதனிடம் கேட்டபோது குட்டியானையை மீண்டும் யானைக் கூட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெண் கன்றுயானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் கன்றுயானையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

இந்நிலையில், கன்றுயானையை மற்ற யானைக்கூட்டம் சேர்க்காததால், அது வனப்பகுதியைவிட்டு வெளியேறி வனச்சாலையில் சுற்றித்திரிந்தது. இந்த யானையை வனத்துறையினர் திரும்ப மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு கால்நடை மருத்துவக்குழுவினர் கன்றுயானையை பரிசோதித்து தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் (புட்டி) பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.

பெண் கன்றுயாணை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுசென்று பராமரிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தநிலையில், திடீரென கன்றுயானையை வாகனத்தில் ஏற்றி, அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டுசென்றுவிட்டனர். மேலும், இந்த நடவடிக்கையை இவர்கள் ரகசியமாக மேற்கொண்டதால், வன உயிரின ஆர்வலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை

இதையடுத்து, கன்றுயானையின் நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். கன்றை யானைக்கூட்டத்துடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை ரகசியமாக இருப்பது ஏன் என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், கன்று யானை குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அலுவலகத்தில் மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்று யானையின் நிலை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனப்பாதுகாவலர் நாகநாதனிடம் கேட்டபோது குட்டியானையை மீண்டும் யானைக் கூட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பகுதியில் காட்டு யானை நடமாட்டம்!

Intro:Body:tn_erd_02_sathy_calf_elephant_reunit_vis_tn10009

தாயை இழந்த குட்டியின் நிலைகுறித்த எழுந்த கேள்விக்கு பதில்:

தாயை இழந்த குட்டியானை மீண்டும் காட்டில் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் வெற்றி கிடைக்கும் என ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் நம்பிக்கை


சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டையில் வனத்தில் வழிதவறி வந்த 3 மாத பெண் குட்டியானை விவசாயத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதனை பார்த்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வனத்துறையினர் குட்டியானை மீட்டு அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவித்தனர். இந்நிலையில், குட்டியை தாயை தேடி நிலையில் ஆசனூர் கிராமத்துக்குள் புகுந்தது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் குட்டியை மீட்டு பவானிசாகர் காராட்சிக்கொரை வனக்கால்நடை மருத்துவமனையில் சேர்த்து பாரமரித்து வந்தனர். தினந்தோறும் அதற்கு 15 லிட்டர் லேக்டோசின் கொடுத்து பாதுகாத்தனர். இந்நிலையில், தாயை பிரிந்த குட்டியை மீண்டும் தாயிடம் சேர்ப்பதற்கு வனத்துறையினர் கடந்த 9ம் தேதி நடவடிக்கை எடுத்தனர். தனிவாகனம் மூலம் குட்டியை அழைத்துகொண்டு பண்ணாரி பேலாரி கோவில் காட்டுப்பகுதியில் காத்திருந்தனர். கடந்த 6 நாள்களாக அப்பகுதியில் தாய் யானை வராததால் மற்றொரு யானை கூட்டத்தில் சேர்ப்பதற்கான முயற்சியும் நடந்து வருவதாக தெரிவித்தனர். குட்டியானையின் நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்பினர். குட்டியை யானைக்கூட்டத்தில் சேர்ப்பதற்கு வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ரகசியமாக இருப்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்ப இணை இயக்குநர் அலுவலகத்தில் ஈரோடு மண்டவ வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் இன்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் குட்டியானை நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஈரோடு மண்டவ வனப்பாதுகாவலர் நாகநாதனிடம் கேட்டபோது குட்டியானையை மீண்டும் யானை கூட்டததில் சேர்ப்பதற்கு அனைத்து விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.