ETV Bharat / state

'கரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்'

ஈரோடு: கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 23, 2020, 11:06 PM IST

கரோனா சிகிச்சை பெறுபவர்
கரோனா சிகிச்சை பெறுபவர்

கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அம்மாவட்ட மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு முத்திரை அளிக்கப்படும்.

அவர்கள் வெளியே வந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கைகளைக் கட்டாயம் கழுவ வேண்டும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளது. முகக்கவசங்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கரோனா பெருந்தொற்று: நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் கூடும் இடங்களில் 1 மீட்டர் இடைவெளிக்கான கோடுகள் வரையப்படும். காய்கறிச் சந்தைகளில் மக்கள் இடைவெளிவிட்டு கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். தனியார் தொலைக்காட்சி சேனலின் பெயரைப் பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பிய 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தாய்லாந்திலிருந்து வந்தவர்களுடன் தொடர்பிலிருந்த 13 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கான சிகிச்சையை முன்னிட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முடக்கம் பற்றி அறிவிப்பு வரவில்லை. மாலை நிலவரம் குறித்து தெரிவிக்கப்படும். கரோனாவைக் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 169 வீடுகளைச் சேர்ந்த 694 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பண்ணாரி சோதனை சாவடி: திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா வாகனங்கள்

கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அம்மாவட்ட மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு முத்திரை அளிக்கப்படும்.

அவர்கள் வெளியே வந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கைகளைக் கட்டாயம் கழுவ வேண்டும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளது. முகக்கவசங்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கரோனா பெருந்தொற்று: நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் கூடும் இடங்களில் 1 மீட்டர் இடைவெளிக்கான கோடுகள் வரையப்படும். காய்கறிச் சந்தைகளில் மக்கள் இடைவெளிவிட்டு கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கு சிகிச்சை பெறுபவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். தனியார் தொலைக்காட்சி சேனலின் பெயரைப் பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பிய 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் கைது செய்யப்பட்டுளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தாய்லாந்திலிருந்து வந்தவர்களுடன் தொடர்பிலிருந்த 13 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பெருந்தொற்றிற்கான சிகிச்சையை முன்னிட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முடக்கம் பற்றி அறிவிப்பு வரவில்லை. மாலை நிலவரம் குறித்து தெரிவிக்கப்படும். கரோனாவைக் குறித்து தவறான தகவல்களைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் 169 வீடுகளைச் சேர்ந்த 694 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பண்ணாரி சோதனை சாவடி: திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா வாகனங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.