ETV Bharat / state

2 பைக்குகள் மீது மோதிய கார் - மூன்று பேர் படுகாயம்

author img

By

Published : Jan 18, 2020, 10:24 AM IST

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

accident
accident

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகன்குமார் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக முரளிதரன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின்போது காரின் ஏர்பேக் விரிந்ததால், கார் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வெங்கடேசன்(45), அவரது மகன் சுசீந்தர் (16) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாததே இளைஞர் உயிரிழப்பிற்குக் காரணம் என விபத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பலர் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். உயிரிழப்பைத் தடுக்க, காவல் துறையினர் ஹெல்மெட் அணிவதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு... போலீசார் சந்தேகம்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகன்குமார் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக முரளிதரன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தின்போது காரின் ஏர்பேக் விரிந்ததால், கார் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வெங்கடேசன்(45), அவரது மகன் சுசீந்தர் (16) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாததே இளைஞர் உயிரிழப்பிற்குக் காரணம் என விபத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஹெல்மெட் அணியாமல் பலர் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். உயிரிழப்பைத் தடுக்க, காவல் துறையினர் ஹெல்மெட் அணிவதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழப்பு... போலீசார் சந்தேகம்

Intro:Body:tn_erd_03_sathy_car_accident_photo_tn10009

பைக் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஹெல்மெட் அணியாத இளைஞர் உயிரிழப்பு:
விபத்தில் கார் பலூன் விரிந்ததால் எதிரே பைக்கில் வந்த தந்தை, மகன் காயம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் கார் ஏர்பேக் விரிந்ததால் எதிரே பைக்கில் வந்த 2 பேர் காயமடைந்தனர்.
.
புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார்(24). இவர் தனது நண்பரான புன்செய்புளியம்பட்டி, பாண்டியன் கிணறு வீதியை சேர்ந்த செல்வராஜ் முரளிதரன் (24) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். பைக்கை முரளிதரன் ஓட்டினார். பனையம்பள்ளி அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே, சென்று கொண்டிருந்த போது, எதிரே பண்ணாரியில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மோகன்குமார் மற்றும் முரளிதரன் ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மோகன்குமார் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக, முரளிதரன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் பைக் மோதலில் காரின் முகப்பு பகுதி உருககுலைந்தது. மேலும், விபத்தின் போது காரில், ஏர்பேக் விரிந்ததால் கார் மற்றொரு ஸ்கூட்டரில் மோதியதில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன்(45). மற்றும் அவரது மகன் சுசீந்தர்(16) இருவரும் காயமடைந்தனர். விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.