ETV Bharat / state

கல்லூரி மாணவி கர்ப்பம்.. சாக்கு மூட்டையில் சடலம்.. ஈரோடு இளைஞர் செய்த பகீர் சம்பவம்!

author img

By

Published : Apr 1, 2023, 9:48 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் மாணவியின் கை, கால்களை கயிற்றால் கட்டி கிணற்றில் வீசிய காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழன் அன்று சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.

கடந்த மாதம் 28-ஆம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் கோபி காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். பின்னர் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவியைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் "கல்லூரி மாணவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகியோர் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு லோகேஷ் எம்.எஸ்.சி 2 ஆண்டு முடித்துவிட்டு கரட்டடி பாளையம் பகுதியில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார்.

கல்லூரி மாணவியும் இளைஞர் லோகேஷும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். கருவை கலைக்க இருவரும் கோவை செல்ல திட்டமிட்டுக் கடந்த 28-ஆம் தேதி கோவை சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியபோது கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், மீண்டும் ஈரோடு திரும்பிய இருவரும் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் கருவை கலைப்பது தொடர்பாகவும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாலும் லோகேஷுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து லோகேஷை உணவு வாங்கி வர வெளியே அனுப்பிய கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய லோகேஷ் மாணவி உடலை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு யாருக்கும் தெரியாமல் மறைக்கும் எண்ணத்தில் கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று 200 மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷை கைது செய்த பங்களாபுதூர் போலீசார் அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தற்கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஓடும் காரில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஆண் நண்பருடன் பூங்காவுக்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்..

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழன் அன்று சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.

கடந்த மாதம் 28-ஆம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் கோபி காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். பின்னர் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி மாணவியைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் "கல்லூரி மாணவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகியோர் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு லோகேஷ் எம்.எஸ்.சி 2 ஆண்டு முடித்துவிட்டு கரட்டடி பாளையம் பகுதியில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார்.

கல்லூரி மாணவியும் இளைஞர் லோகேஷும் அடிக்கடி தனிமையில் சந்தித்த நிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். கருவை கலைக்க இருவரும் கோவை செல்ல திட்டமிட்டுக் கடந்த 28-ஆம் தேதி கோவை சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனை ஒன்றை அணுகியபோது கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், மீண்டும் ஈரோடு திரும்பிய இருவரும் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் கருவை கலைப்பது தொடர்பாகவும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாலும் லோகேஷுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து லோகேஷை உணவு வாங்கி வர வெளியே அனுப்பிய கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய லோகேஷ் மாணவி உடலை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு யாருக்கும் தெரியாமல் மறைக்கும் எண்ணத்தில் கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று 200 மீட்டர் தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷை கைது செய்த பங்களாபுதூர் போலீசார் அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தற்கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஓடும் காரில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஆண் நண்பருடன் பூங்காவுக்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.